Advertisment

தாமிரவருணியில் மகா புஷ்கரம்! நதியும் நதிக்கரையும் பாழாகும் என தமிழ் அன்பர்கள் வேதனை..!

Thamirabarani

தமிழ் நதி என்ற பெருமை கொண்ட தாமிரவருணி மகா புஷ்கரம் வரும் அக்டோபர் 11ல் தொடங்கி 22ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், நதியும் நதிக்கரையும் மாசுபடும், பழாகும் என்பதால் தாமிரவருணி புஷ்கர விழாவினை ஏதேனும் ஒரு மடத்தில் வைத்து மடாதிபதிகளுடன் இணைந்து ஒரு நாள் விழாவாக அரசு நடத்தி முடிக்க வேண்டுமென தமிழ் அன்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisment

வரலாற்று ஆய்வாளர் இளசை மணியனோ, " அக்டோபர் 11 முதல் 22ம் தேதி வரை தாமிரபரணி நதிக்கரை தீரத்தில் புஷ்கர விழா நடைபெறுகிறது. இந்த நாள்களில் தாமிரவருணி நதிக்கரையில் உள்ள 149 தீர்த்த கட்டங்களில் படித்துறை பூஜை, ஆரத்தி பூஜைகள் நடைபெற உள்ளன. மேலும் ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புஷ்கர விழாவில் பங்கேற்ற தாமிரவருணி நதியில் நீராடி வழிபடுவார்கள் என மடாதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். அது குறித்து தினசரி ஆலோசணை கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுவாக புஷ்கரம் என்பது மனிதர்களுக்கு ராகு கேது மாற்றங்களினால் ராசிநாதன் அந்த மக்களுக்கு அது பிரவேசிக்க கூடியதை அறிமுகப்படுத்தக்கூடிய இனம் காட்டக்கூடிய நிகழ்வாக நடைபெற்று வருவது வழக்கம். ஆனால் திடீரென தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுகளுக்கு பிறகு இந்நிகழ்வு நடைபெறுவதாக மடாதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதனுடைய மர்மம் என்னவென்று தெரியவில்லை.

Advertisment

Thamirabarani

ஆனால் தாமிரவருணிக்கு என்று ஒரு சிறப்பு உண்டு. அதாவது தமிழகத்திலேயே நெல்லை சீமையில் தீர்த்தம் தோன்றி தென் பகுதியிலேயே கடலில் சென்று சேரக்கூடிய சிறப்புகுரிய நதியாகும் தாமிரவருணி. அந்த தாமிரவருணி நதியை இந்த 10 நாள்களில் புழுதிகாடாக ஆக்குவதற்கு மடாதிபதிகள் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த புண்ணிய தீர்த்தத்தின் புனித நீரை நாங்கள் நீராடுகிறோம். படிக்கட்டுகளில் இருந்து பூஜிக்கிறோம் என்று புஷ்கர விழா என்ற பெயரில் நதியை இயற்கைக்கு விரோதமாக அசுத்தப்படுத்துகிறார்கள். மாசுப்படுத்துகிறார்கள். தென் தமிழ்நாட்டு பூமியை குளிர வைக்ககூடிய தாமிரபரணி தாய்க்கு நேரிட்டிருக்கிற அவலத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு மாற்றாக தாமிரபரணி நீரை பாபநாசத்திலிருந்து அது சங்கமாகும் புன்னக்காயல் கடல் வரை ஆங்காங்கே இருக்ககூடிய விவசாயிகள் பொதுமக்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள் இவர்கள் எல்லாம் இந்த புண்ணிய நதியின் ஆளுமையை சிறப்பை புகழை எடுத்து கூறி அதை தூர் வாருவதற்கு சுத்தப்படுத்துவதற்கு மாசில்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதுவே நாம் புஷ்கர விழா நடத்துவதை போல் ஆயிரம் மடங்கு உயர்வானது. இந்த மடாதிபதிகள் எங்கு இருக்கிறார்களோ அவர்களது தர்மசாலைகளில் புஷ்கர விழாவை நடத்தி கொள்ளலாம். அதற்காக நதியை பலிகடா ஆக்க வேண்டாம் என்பது தான் பணிவான வேண்டுகோள்.

நட்சத்திரங்கள் மாறுவதை இந்த நட்சத்திரங்கள் என்ன காரணத்துக்காக மாறுகிறது என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அந்தந்த மடாலயங்களில் நடத்தி கொள்ளலாம். அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். எதிர்ப்பும் இருக்காது. ஆனால் நதியை கலங்கப்படுத்த வேண்டாம். மாசுபடுத்த வேண்டும். தண்ணீரை கலங்கப்படுத்த வேண்டாம் . இந்த தாமிரபரணி ஆற்றில் கங்கைகொண்டான் பகுதியில் தான் வெளிநாட்டுகாரன் தன்னுடைய கம்பெனி மூலம் நதி நீரை உறிஞ்சி எடுத்து கோகோ கோலோ போன்ற குளிர்பானங்கள் தயாரிப்பதற்கு இந்த தண்ணீரை பயன்படுத்துகிறானே அதைபற்றி இந்த மடாதிபதிகள் என்ன நினைக்கிறார்கள். இந்த தண்ணீரை இன்னொருவன் விலைக்கு விற்கிறானே ஆனால் இந்த தண்ணீர் புனித நீர் என்று கண்களை திரை போட்டு மறைக்கிறார்களே இதில் என்ன அர்த்தமிருக்கிறது.

அரசு புஷ்கர விழா அந்த மடாதிபதிகளிடம் தெளிவாக அந்த தேதி நாள் நட்சத்திரத்தின் நேரம் ஆகியவற்றை அறிந்து கொண்டு அந்த சமயத்தில் இந்த மாடாதிபதிகளை மையமாக கொண்டு அந்த புஷ்கர விழாவை ஏதாவது சிறந்த மடத்தில் வைத்து அந்த நிகழ்வை நடத்தி ஒரு நாளில் முடித்து விடலாம். அது பக்தர்களின் மனதையும் புண்படுத்தாது. அந்த செய்கை மடாதிபதிகளின் மனதையும் புண்படுத்தாது. ஆக இந்த அரசாங்கம் மடத்துக்கு விரோதமாக கடவுள் நம்பிக்கைக்கு விரோதமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டும் வராது. அதற்கு மாறாக 10 தினங்களும் அந்த புண்ணிய தீர்த்தத்தில் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குளித்து நீராடி செல்வதானால் அந்த நதியின் நிலைமை என்னவென்பதை நடைபெறுவதால் கற்பணை செய்து கூட பார்க்க முடியாது.

கும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் தீர்த்தமாடுவது என்பது 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை. நீராடிவிட்டு மக்கள் சென்றுவிடுகிறார்கள். அதற்கான குளம் அது. தாமிரபணி அப்படியல்ல. குடிநீர், வேளாண்மைக்கு உண்டான தண்ணீர் இது தவிர பானங்கள் தயாரிக்க உற்பத்தியாக கூடிய தண்ணீர் என பல்துறை முனையில் இதனுடைய உபயோகம் பயன்பாடு உள்ளது. அதனால் தான் நதி தீரத்தில் புஷ்கர விழாவை நடத்த வேண்டாம் என திட்டவட்டமாக வலியுறுத்துகிறோம். மகாமக குளத்தில் மாசுகளை தடுத்து நிறுத்துவதற்கான விஞ்ஞான ரீதியான அனுகுமுறைகள் இன்றைக்கு உள்ளது. ஆனால் தாமிரபரணி நதிக்கரையில் அது இல்லை. புன்னைக்காயல்வரை எல்லா விதமான அசுத்தங்களும் செல்லும். தடுத்து நிறுத்துவார் யாரும் கிடையாது. அவரவர் புஷ்கர விழாவினை நடத்திவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவார்கள்." என்கிற அவர் இதனையே கோரிக்கையாக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

river thamiraparani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe