k

Advertisment

தமிழக அரசியல் சூழ்நிலை பரபரப்பாக உள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் தமிழக ஆளுநர் பனிவாரிலால் புரோகித் சந்தித்துப் பேசியுள்ளார். பஞ்சாப் மற்றும் சண்டிகரின் ஆளுநர் பொறுப்பை பன்வாரிலால் புரோஹித், கூடுதலாக ஏற்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அமித்ஷா உடனான சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆளுநர் விவாதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொடநாடு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச் சந்தித்து மனு அளித்த நிலையில் அது பற்றியும் பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.