Advertisment

புரட்டாசி எஃபெக்ட்; ஒரே நாளில் 17 லட்சத்திற்கு விற்பனையான காய்கறிகள்

Puratasi Effect; 17 lakh worth of vegetables sold in farmers markets in a single day

Advertisment

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் இந்த மாதத்தில் மக்கள் பெரும்பாலானோர் அசைவ உணவு வகைகளைத் தவிர்த்து சைவ உணவுகளை உண்பது வழக்கம். இதனால் இந்த மாதத்தில் காய்கறிகளின் தேவை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியதை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகளிலும் விவசாயிகள் அதிக அளவில் காய்கறிகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். அனைத்து உழவர் சந்தைகளிலும் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காய்கறிகளை அதிக அளவில் வாங்கிச் சென்றனர்.

ஈரோடு மாநகரில் உள்ள சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 22.58 டன் காய்கறிகள் ரூ.6 லட்சத்து 78 ஆயிரத்து 865 -க்கு விற்பனையானது. அதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் மொத்தம் வரத்தான 58.67 டன் காய்கறிகள் ரூ.17 லட்சத்து 2 ஆயிரத்து 122-க்கு விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Erode Market vegetables
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe