Skip to main content

2021-லும் இபிஎஸ்தான் முதல்வர்... வழக்கம்போல் ரஜினி அந்த அதிசயத்தை வேடிக்கை பார்ப்பார்- புகழேந்தி பேட்டி! 

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

டிடிவியின் தீவிர ஆதரவாளராக இருந்த புகழேந்தி கடந்த சில மாதங்களாகவே டிடிவி-க்கு எதிராக செயல்பட்டுக் கொண்டு ஊர் ஊருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக போட்டி கூட்டங்களை போட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உள்ள கட்சி பொறுப்பாளர்களையும், தொண்டர்களையும் தன் பக்கம் இழுத்து வருகிறார். இப்படி  கட்சியை உடைத்து ஆதரவாளர்களை திரட்டி வரும் புகழேந்தி கூடிய விரைவில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைய இருக்கிறார்.

 

PUGAZHENDTHI INTERVIEW

 

இந்தநிலையில் திண்டுக்கல் ஆலோசனை கூட்டத்திற்கு வந்த புகழேந்தி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, 

நடத்துனர் சிவாஜி ராவாக சென்னைக்கு வந்த ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக மாறியது ஆச்சரியம் இல்லையா. பாஜக ரஜினிகாந்தின் வருகையை எதிர்பார்த்து ஏமாந்து தற்போது வாசன் தலைமையில் கட்சியை ஒப்படைக்க இருக்கிறது. அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள இயலாமல் ஆத்திரத்தில் ரஜினிகாந்த் உளறுகிறார். 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி மீண்டும்  முதலமைச்சராக பதவியேற்பார். வழக்கம்போல நடிகர் ரஜினிகாந்த்  கட்சியை துவக்காமல் இந்த அதிசயத்தை வேடிக்கை பார்ப்பார். எம்எல்ஏவாக, எம்பியாக அமைச்சராக 45 ஆண்டு காலம் அரசியல் அனுபவம் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக மீண்டும் வருவார் என்று கூறினார். 

பேட்டியின்போது நகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் உடனிருந்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.