Skip to main content

முகக் கவசம் போடவில்லையா... மரக்கன்று கொடுத்து வளர்க்கச் சொன்ன போலீசார்! 

Published on 12/07/2020 | Edited on 13/07/2020

 

 Young people on a bike without a face mask...The cop who told him to grow tree

 

சாத்தன்குளம் சம்பவத்தால் மக்களுக்கு போலீசார் மீது இருந்த மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், முகக் கவசம் இல்லாமல் மோட்டார் சைக்கிள்களில் சுற்றிய இளைஞர்களைப் பிடித்து அவர்களுக்கு முகக் கவசம் மற்றும் மரக்கன்றுகளை வழங்கி வீட்டில் வளர்க்க வேண்டும் என்று நூதன் தண்டனை கொடுக்கும் போலீசாரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் முழு ஊரடங்கு நேரத்தில் மோட்டார் சைக்கிள்களில் சுற்றிய இளைஞர்களைப் பிடித்த ஆலங்குடி டி.எஸ்.பி. முத்துராஜா மற்றும் கீரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுதர்சன் மற்றும் போலீசார் அவர்களுக்கு முகக் கவசம் வழங்கியதுடன் அவர்கள் கையில் ஒரு மரக்கன்றையும் கொடுத்து முகக் கவசம் அணியாமல் வந்ததற்குத் தண்டனை இந்த மரக்கன்றை நல்ல முறையி்ல் வளர்ப்பது தான். இந்த மரக்கன்றைப் பார்க்கும் போதெல்லாம் தலைக்கவசம், முகக் கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள்களில் செல்ல வேண்டும் என்பது நினைவுக்கு வர வேண்டும்.

அதனால் தினமும் உங்கள் பார்வை படும் இடத்தில் இந்தக் கன்றை நட்டு நல்ல முறையில் வளர்க்க வேண்டும். இந்த மரக்கன்று 5 ஆண்டுகளில் வளா்ந்து நல்ல பலனை உங்களுக்குக் கொடுக்கும் என்று அறிவுரையும் கூறி அனுப்பி வைத்தனர். மேலும் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அவர்களின் முகவரியும் வாங்கிக் கொண்டனர். அடித்து உதைத்து அபராதம் விதித்தால் மக்கள் போலீசார் மீதான நட்பும், நம்பிக்கையும் காணாமல் போய்விடும். ஆனால் இப்படி அன்பாகச் சொன்னால் நிச்சயம் மக்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக அப்பகுதி இளைஞர்கள் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.