Skip to main content

நான் டாக்டர் 515 கணேசன் வந்திருக்கிறேன்... நீலகிரி மக்களுக்கு உதவ முடிஞ்சத கொடுங்க...

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்தே டாக்டர் பட்டம் வாங்கிய முதியவர் டாக்டர் ஆலங்குடி 515 கணேசன். இந்தியாவில் எங்கே இயற்கை சீற்றத்தால் மக்கள் அவதிப்பட்டாலும் அவர்களுக்கு உதவ தனது அம்பாசிட்டர் காரை எடுத்துக் கொண்டு ஊரு ஊருக்கு சென்று நிவாரணம் திரட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக கொடுப்பது அவர் பழக்கம். கஜா புயலில் தான் குடியிருந்த வீட்டின் கூரைகள் காற்றில் பறந்துவிட்ட போதும் ஒட்டுமொத்த உடமைகளும் மழையோடு போன போதும் கூட தளராமல் தன் சொந்த மாவட்ட மக்களுக்கு உதவ கரூர் பக்கம் காரோடு சென்றவரை பாராட்டி ராகவா லாரன்ஸ் சொந்த செலவில் வீடுகட்டிக் கொடுத்தார்.

 

I am  Dr. 515 Ganesan ... please help the Nilgiris ...

 


கர்நாடக பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்தது. தோழர் நல்லக்கண்ணு கொத்தமங்கலம் விழா பொதுமேடையில் அழைத்து பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த சமூக சேகவர் 515 கணேசன்தான் இப்போது நீலகிரி மாவட்ட மக்களுக்கு உதவ உண்டியலோடு கிளம்பிவிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கடைவீதியில் தனது காரோடு வந்தவர் துணைக்கு ஒருவரையும் அழைத்து வந்தார். ஒரு கையில் கார் ஸ்டியரிங், மறு கையில் மைக்.. மெதுவாக நகர்ந்த காரில் இருந்து பேசுகிறார்.. 5200 சடலங்களை இலவசமாக தூக்கியே டாக்டர் பட்டம் வாங்கின ஆலங்குடி 515 கணேசன் உண்டியலோட வந்திருக்கிறேன். புயலில் நீங்களும் பாதிக்கப்பட்டீங்க தெரியும். இருந்தாலும் உங்களிடம் இருக்கிற ஒரு ரூபாய் முதல் எவ்வளவு போட முடியுமோ உதவி செய்யுங்கள். நம்ம உறவுகள் நீலகிரி மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள். மாற்று உடையில்லை உதவுங்கள் என்று விளம்பரம் செய்து கொண்டே போக மற்றவர் ஒரு உண்டியலை முன்னால் கொண்டு செல்ல காரில் ஒரு உண்டியல் வைத்துக் கொண்டார். சென்ற இடமெல்லாம் கையில் இருந்ததை கொடுத்தார்கள்.

 

I am  Dr. 515 Ganesan ... please help the Nilgiris ...


எத்தனையோ பேர் இப்படி உதவிகள் செய்றதா சொல்லி வசூல் செஞ்சு ஏமாத்திட்டு போறாங்க. ஆனா 515 கணேசன்கிட்ட கொடுத்தால் சரியா போய் சேரும். அதனாலதான் அவர் வருவாருனு காத்திருந்து எங்களால் முடிஞ்சத கொடுக்கிறோம் என்றனர் நிவாரண உண்டியலில் பணம் போட்டவர்கள்.

டாக்டர் 515 கணேசனோ.. கோயில் கட்ற இனத்தில பிறந்தாலும் ஏழைகள் செத்தால் தூக்கி போக மறுக்கும்போது வேடிக்கை பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியுமா? அதனாலதான் 18 வயசுல 515 நம்பர் கார் வாங்கி ஏழைகள், ஆதரவற்றவர்களின் சடலங்களையும், பிரசவத்துக்கு கர்ப்பிணிகளையும் இலவசமாக ஏற்றினேன். இதுவரை 5200 சடலங்களை ஏற்றியாச்சு. 100 க்கும் மேற்பட்ட சடலங்களை நானே அடக்கமும் செஞ்சுட்டேன். ஆயிரம் கர்ப்பிணிகளை ஏற்றி நல்லபடியா பிரசவம் நடந்திருக்கு. டீசலுக்காக பழைய இரும்பு வியாபாரம் செய்வேன். 

இந்தியாவுல எங்கே இயற்கை பாதிப்புன்னாலும் நிவாரணம் வசூல் பண்ணி நேரில் கொண்டு போய் கொடுப்பேன். சுனாமி, தானே, வர்தா புயல் இப்படி எல்லாத்துக்கு கொடுத்தாச்சு. கடைசியல கஜா புயல்ல என் வீடே காணாம போச்சு. முடங்கி கிடக்க முடியுமா? காருக்குள்ள குடியிருந்தோம். இந்தியாவுல எங்கே பாதிப்புன்னாலும் உதவி செய்ய நம்ம மாவட்ட மக்களுக்கு உதவனுமேன்னு கரூர் பக்கம் போய் நிவாரணம் திரட்டி வந்து கொஞ்சம் பேருக்கு கொடுத்தேன். என் நிலமையை பார்த்துட்டுதான் அய்யா ராகவா லாரன்ஸ் எனக்கு தார்சு வீடு கட்டிக் கொடுத்தார். அவரை எப்பவும் மறக்க மாட்டேன்.

பிணம் தூக்குனதுக்காக டாக்டர் பட்டம் வாங்குன முதல் ஆள் நானாக தான் இருக்க முடியும். இப்ப நீலகிரி மாவட்டத்தில் கனமழையால மண்சரிவு ஏற்பட்டு வீடு வாசலை இழந்து நிர்கதியா நிற்கும் நம்ம உறவுகளுக்கு நம்மால் இயன்ற சிறு  உதவிகள் செய்யும் எண்ணத்தோடதான் புயலில் பாதித்த மக்களிடம் வந்தேன். எல்லாரும் நிவாரணம் கொடுக்கிறார்கள். விரைவில் நீலகிரி கொண்டு போய் பாதிக்கப்பட்டுள்ள நம் உறவுகளுக்கு கொடுப்பேன் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.