Skip to main content

நக்கீரன் வெளிக்காட்டிய கால்களை இழந்த இளைஞருக்கு நேரில் சென்று உதவிய ஆட்சியர்- உறுதுணையாக நின்ற மனைவிக்கு பாராட்டு!

Published on 05/11/2020 | Edited on 05/11/2020
Collector who went in person to help the young man who lost his legs exposed by Nakkheeran- Congratulations to the wife who stood by!

 

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஒன்றியம் சம்மட்டிவடு ஊராட்சி மேலவிடுதி கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ராஜா. தனது 22 வது பிறந்த நாள் அன்று தனது இடது கால், முழங்காலோடு தனியாக விழக்கண்டார். அடுத்த சில மாதங்களில் மற்றொரு காலும் அதே பாதிப்பால் அறுத்து எடுக்கப்பட்டது. இது எல்லாம் காதல் திருமணமாகி 6 மாதங்களில் நடந்துவிட்டது. ராஜாவுக்கு உடல்நலமில்லை என்ற நிலையில் அவரது காதல் மனைவி விமலாவை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். கணவரின் கால்கள் அகற்றப்பட்டு அவதிப்பட்டுவருகிறார் என்ற தகவலை நண்பர்கள் மூலம் அறிந்த விமலா ராஜாவை தேடி வந்துவிட்டார். அதன் பிறகு கடந்த 4 வருடங்களாக தனது கணவரின் இயற்கை உபாதைகளை அள்ளிக் கொண்டு பணிவிடை செய்து கொண்டிருக்கிறார்.

கணவருக்கு உடல்நலமில்லை என்றால் தவிக்கவிட்டு ஓடும் காலத்தில் இப்படி வந்து உதவிகள் செய்து கொண்டிருக்கும் விமலாவை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு கழிவறை இல்லாமல் அவர்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்தத் தகவல் 'மக்கள் பாதை' ராமதாஸ் மூலமாக நமக்கு வர, மேலவிடுதி கிராமத்திற்கு நேரில் சென்று அவர்களின் நிலையை, நக்கீரன் இணையத்தில் கடந்த மாதம் செய்தியாகவும் வீடியோவாகவும் வெளியிட்டிருந்தோம். இந்த குடும்பத்திற்கு அரசு உதவிகள் கிடைக்க மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கவனத்திற்கு கொண்டு சென்று உதவிகள் கேட்டோம். வீடியோ வெளியான நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட சேர்மன் ஜெயலெட்சுமி ஆகியோரும் உதவிகள் செய்வதாக உறுதி அளித்தனர்.

 

Collector who went in person to help the young man who lost his legs exposed by Nakkheeran- Congratulations to the wife who stood by!



அதேபோல நமது செய்தியைப் பார்த்து கொடையுள்ளம் கொண்ட பலரும் ராஜா தம்பதிக்கு உதவிக்கரம் நீட்டினார்கள். மேலும் பல தன்னார்வத் தொண்டு அமைப்புகள் உதவிகள் செய்து வந்தனர். இந்தநிலையில் தான் மாவட்ட ஆட்சியர் உமாமகேஷ்வரி நக்கீரன் கோரிக்கையை ஏற்று வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் கள ஆய்வு செய்த பிறகு, நவம்பர் 5 ஆம் தேதி மாலை மேலவிடுதி கிராமத்திற்கு நேரில் சென்று ராஜாவுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கியதுடன், அரசு உதவிகள் வழங்க உள்ளதாகவும் கூறினார்.

விரைவில் பசுமை வீடுகட்ட உத்தரவு வழங்க உள்ளார் மாவட்ட ஆட்சியர். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, வட்டாட்சியர் முருகப்பன் ஆகியோர் உடனிருந்தனர். 

*விமலாவை பாராட்டி சால்வை*

மேலும் ஆட்சியர், கால்களை இழந்த கணவரையும் தனது குழந்தையையும் பாதுகாத்துப் பணவிடைகள் செய்து வரும் ராஜாவின் மனைவி விமலாவைப் பாராட்டியதுடன் சால்வையும் அணிவித்தார். 4 வருடமாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த ராஜாவுக்கு உதவிய மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட நல் உள்ளங்களுக்கும் வெளிக்கொண்டு வந்த நக்கீரனுக்கும் மேலவிடுதி மக்கள் நன்றி கூறினார்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.