Skip to main content

வெள்ளாற்றங்கரையோரத்தில் பணியாற்றிய சிறப்பு பிரிவு போலிசார் கூண்டோடு மாற்றம் ஏன்?

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றிய சிறப்பு பிரிவு போலிஸ் இன்ஸ்பெக்டர் உள்பட வெள்ளாற்று கரையோர காவல் நிலையங்களில் பணியாற்றிய சிறப்பு பிரிவு போலிசார் 13 பேர் மண்டலம் விட்டு மண்டலம் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதானமாக உள்ளது வெள்ளாறு, அக்னி ஆறு, கோரையாறு இந்த ஆறுகளை இணைத்து காவிரி – குண்டாறு  இணைப்பு திட்டத்தை கொண்டுவரக்கோரி 50 வருடங்களுக்கு மேலாக விவசாயிகள் போராடிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் விவசாயிகளின் இந்த கோரிக்கை ஏனோ நிறைவேற்றப்படவில்லை.

 

PUDUKOTTAI


இந்த ஆறுகளில் தண்ணீர் வந்தால் விவசாயிகள் வாழ்வு சிறக்கும். ஆனால் தண்ணீர் வரவில்லை என்றால் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் ஒரு சில திருடர்களுக்கும் வாழ்வு செழிக்கும். இதில் இரண்டாவதைதான் செய்து வருகிறார்கள். இவர்கள் செழிக்கிறார்கள் விவசாயிகள் குடிக்க கூட தண்ணீர் இன்றி தவிக்கிறார்கள். மணல் கொள்ளையை தடுங்கள் நிலத்தடி நீர் ரொம்ப கீழே போயிடுச்சு என்று போராடி போராடி ஓய்ந்துவிட்டார்கள். தடுக்க வேண்டியவர்கள் மணல் கொள்ளையர்களுக்கு காவல் காக்கிறார்கள்.

இந்தநிலையில்தான் முதல்கட்டமாக வெள்ளாற்றுக் கரையோரம் உள்ள சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் உள்பட 13 போலிசார் மண்டலம் விட்டு மண்டலம் மாற்றப்பட்டுள்ளனர்.

 

PUDUKOTTAI

 

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில்.. திருச்சிக்கு புதுசா வந்த டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அதிரடியாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்தநிலையிலதான் புதுக்கோட்டையில் மணல் கடத்தலும் கஞ்சா போன்ற போதை பொருள் விற்பனையும் அதிகமாக உள்ளது என்பதை கண்டறிந்தார். தொடர்ந்து தனி டீம் அமைத்து ரகசிய விசாரணை செய்தபோது மணல் திருட்டால் சில வருடங்களுக்கு முன்பு இரட்டை கொலை வரை நடந்திருக்கிறது என்பதை அறிந்தவர் மறுபடியும் மக்கள் தொடர்ந்து போராடினாலும் திருட்டு நடக்கிறது அதனால் மறுபடியும் ஏதாவது உயிர்பலிகள் கூட நடக்க வாய்ப்புகள் உள்ளது என்பதை தெரிந்து கொண்டார். ஆனால் இந்த தகவல்களை கொடுக்க வேண்டிய சிறப்பு தனிப்பிரிவு எல்லா தகவல்களையும் மறைத்துள்ளதுடன் அதில் பலர் மணல் திருடர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதையும் ஆதாரங்களுடன் எடுத்தார். அதேபோல கஞ்சா வியாபாரிகளிடம் சிலர் தொடர்பில் இருப்பதையும் தனது ரகசிய குழு மூலம் அறிந்தவர் முதல்கட்டமாக வெள்ளாற்றுப்படுகையில் உள்ள காவல்நிலையங்களில் உள்ள சிறப்பு பிரிவினரை மண்டலம் விட்டு மண்டலம் மாற்ற பரிந்துரை செய்தார்.

 

 In pudukottai Why did the Special Task Force transfered

 

இப்படி ஒரு நடவடிக்கையை அறியாமல் இருந்த போலிசார் இப்பொழுது திக் திக்'னு இருக்காங்க. அதில் சிலர் மணல் கொள்ளையர்களிடமும், மாண்புமிகுவிடமும் போய் நீங்க சொன்னீங்கன்'னுதான் தகவல்களை மறைச்சோம். இப்ப இப்படி மாத்தி உத்தரவு வந்திருக்கு. அந்த உத்தரவை ரத்து செய்யனும் என்று மன்றாடி கொண்டிருக்கிறார்கள்.

டி.ஐ.ஜி யின் அடுத்த நடவடிக்கை கோரையாற்றுப் படுகையில் உள்ள சிறப்பு பிரிவினரை மாற்றுவது. அதாவது 15 நாளைக்கு முன்னால் கிராம மக்களே லாரி, பொக்கலின்களை பிடிச்சு போராட்டம் நடத்தினாங்க. அந்தபகுதிதான் கொலை நடந்த பகுதியும் கூட அதனால அந்த பகுதியிலும், அடுத்து கறம்பக்குடி பகுதியில் உள்ள அக்னி ஆற்றில் மணல் கொள்ளைக்கு துணை போகும் போலிசாரையும் மாற்ற திட்டமிட்டு ஆதாரங்களை திரட்டி வருகிறார் என்றனர் ரகசியம் தெரிந்த போலிசார்.

அதே போல புதுக்கோட்டை நகரில் சந்தைப்பேட்டை, திருவப்பூர் பகுதியில் மொத்தமாகவும், சில்லரையாகவும்  விற்கப்படும் கஞ்சாவையும், விற்பனையாளர்களையும் பிடித்து மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி- சட்டக்கல்லூரி மாணவர் கைது

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Law college student arrested for fraud of getting a job in the Secretariat

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.

அதன் பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் யாருக்காவது வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கித் தருகிறேன் என்றார். அப்போது எனக்கே வேலை வேண்டும் என்றேன். அதற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார். நானும் அவர் சொன்னதை நம்பி நான் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்துவதாக சொன்ன போது வேண்டாம் நேரில் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னவர் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கார்த்திக் புதுக்கோட்டை வந்திருப்பதாக தெரிந்தது. நானும் என் நண்பன் பாலகிருஷ்ணனும் அன்று மாலை புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சந்தித்து முதல் தவணையாக ரூ.1 லட்சம் பணமாக கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டவர் மீதி ரூ.2 லட்சத்தை ரெடி பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போனார்.

அதன் பிறகு வேலை என்னாச்சு என்று கேட்க பலமுறை அவரை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று (ஏப்ரல் 25 ஆம் தேதி) அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே நான் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு நபர் என்னிடம் நங்கள் தான் சத்திரயாரஜா என்று கேட்டவர் கார்த்திக் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார் என்று சொல்லிவிட்டு அவரது செல்போனில் வாட்ஸ் அப் காலில் கார்த்திக்கிடம் பேசச் சொன்னார். அப்போது ஏன் என் போனை எடுக்கவில்லை. என் வேலை, பணம் என்னாச்சு என்று கேட்ட போது, உன் பணம் வெளியில் கொடுத்துவிட்டேன். இனிமேல் பணமும் இல்லை, வேலையும் இல்லை என்று சொன்னதோடு இனிமேல் பணம் கேட்டால் எனக்குத் தெரிந்த காரைக்குடி ரவுடிகளை வைத்து உன்னை தீர்த்துக்கட்டிவிடுனே் என்று கொலை மிரட்டல் செய்ததோடு தகாத வார்த்தைகளிலும் பேசிவிட்டு போனை நிறுத்திவிட்டார். என்னிடம் போனைக் கொடுத்த நபரும் என்னை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

எனக்கு தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் பணமும் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டு என்னையும் என் குடும்பத்தையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

புகார் குறித்து வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தனிப்படை அமைத்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக்கை சென்னையில் கைது செய்து அறந்தாங்கி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். மேலும் விசாரனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சென்னை முதல் அறந்தாங்கி வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.