Skip to main content

மாற்றுப் போதையில் தள்ளாடும் புதுக்கோட்டை... அதிரடி காட்டிவரும் காவல்துறை!

Published on 12/10/2019 | Edited on 12/10/2019

குடிமகன்களுக்காக டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. ஆனால் புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் மாற்றுப் போதைக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள். மாறுவது மட்டுமல்ல பள்ளி, கல்லூரி மாணவர்களையும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக புதுக்கோட்டை புதுக்குளத்தின் கரையில் இந்த மாற்றுப் போதை இளைஞர்கள் பயன்படுத்தி வந்த ஊசிகள், மருந்து புட்டிகள் கிடந்ததை நக்கீரன் வெளிக்காட்டியது. ஆனால் அதன் பிறகு தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் யாரும் சிக்கவில்லை.

ஆனாலும் இளைஞர்களை, மாணவர்களை குறிவைத்து அந்த கும்பல் வேகமாக வியாபாரத்தை செய்ய தொடங்கியது. கடந்த மாதம் புதுக்கோட்டை நகரில் ஒரு பெண். அறுவைச் சிகிச்சையின்போது வலி நிவாரணியாக பயன்படுத்தும் ஊசிகளை, மாத்திரைகளை போதைக்காக இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்தது அறிந்து போலீசார் பிடித்தனர். அவரை கைது செய்ய பல தரப்பில் இருந்தும் முட்டுக்கட்டை போட்டாலும் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த பெண் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

  pudukottai incident.. Action Police!


இந்தநிலையில்தான் கடந்த வாரம் அறந்தாங்கி அருகில் உள்ள அரசா்குளத்தில் இரு இளைஞர்களை மாற்றுப் போதையில் தள்ளாடிய இருவரை கைது செய்த அறந்தாங்கி டி.எஸ்.பி. தலைமையிலான நாகுடி சப். இன்ஸ்பெக்டர் டீம் அவர்களிடம் விசாரித்த போது, போதைக்காக பயன்படுத்தும் மாத்திரைகள், ஊசிகள் இருப்பதை எடுத்தனர். தொடர்ந்து அவர்களுக்கு மாத்திரை, ஊசிகளை கொடுக்கும் அவினாசி பெண் உள்பட 4 பேரையும் கைது செய்து சுமார் 2500 வலிநிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் புதுக்கோட்டை ஆணழகன் கைது செய்யப்பட்டார். இப்படி அதிரடி கைதுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தான்.

இன்று புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல்நிலைய எல்லையில் தான் அதிகமாக போதைக்காக கஞ்சா, ஊசி, மாத்திரை, மருந்துகள் விற்கப்படும் தகவல் அறிந்து சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் 6 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்தனர்.

 

mm

 

பெரியகுளம் மியூசியம் பிரபாகரன் (27), ரெட்டைக்குளம் பியூசியம் சுகு (எ) சுகுமார் (27), சங்கரமடம் தர்மா ( 25), ஆர்ஜி புரம் ராகசேந்திரன் (24), நரிமேடு சமத்துவபுரம் சதீஸ்வரன் (26), பாண்டியன் (24) ஆகிய 6 பேரையும் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்த இளைஞர்களிடம் போதைக்காக விற்பனை செய்ய வைத்திருந்த வலி நிவாரணி மாத்திரைகள், ஊசி மருந்துகளையும் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட போலீசாரின் இந்த நவடிக்கையை பாராட்டும் பொதுமக்கள் இதேபோல நகரில் இருந்து கிராமங்களுக்குள்ளும் பரவியுள்ள மாற்றுப் போதைக்கு ஊசி, மாத்திரை விற்பவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர். எதற்கெல்லாமே நல்ல பெயரை வாங்கிய புதுக்கோட்டை தற்போது மாற்றுப் போதையில் தள்ளாடிவருவது வருத்தமளிக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.