Skip to main content

அமைச்சர் விஜயபாஸ்கர் என்னைப்போல ஏமாளி: தேமுதிக வேட்பாளர் பேச்சு

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

புதுக்கோட்டை மாவட்டம் நாடாளுமன்ற தொகுதி என்ற அந்தஸ்தை இழந்து 3 வது தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை சட்டமன்றத் தொகுதி மட்டும் கரூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

 

pudukottai costituency  Candidate speak about minister vijayabaskar

 

 

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை பா.ஜ.க வுக்கும், திருச்சி தொகுதி தே.மு.தி.க வுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக விழாவிற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்திருந்தார். கரூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை விராலிமலை தான் என் தொகுதிக்குள் வருகிறது. அதனால் புதுக்கோட்டைக்கு வரவில்லை என்று மறுத்துவிட்டார். அதேபோல ராமநாதபுரம் தொகுதியில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி வந்தாலும் கூட்டணி கட்சியான பா.ஜ.க வேட்பாளர் வரவில்லை. 

 

pudukottai costituency  Candidate speak about minister vijayabaskar

 

ஆனால் திருச்சி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டக்டர் ஆர்.இளங்கோவனும், தலைமை அறிவிக்காமலேயே சிவகங்கைத் தொகுதியில் தன்னை தானே வேட்பாளராக அறிவித்துக் கொண்ட எச்.ராஜாவும் வியாழக் கிழமையன்று புதுக்கோட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு வந்தனர். இவர்களை வரவேற்க அ.தி.மு.க மகளிரணியிரனர் குத்தாடம் போட்டு வரவேற்றனர். அறிமுக கூட்டத்தில் திருச்சி தொகுதி வேட்பாளர் இளங்கோவனை அறிமுகப்படுத்திய அமைச்சர் விஜயபாஸ்கர் நாங்கள் இருவரும் மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்கள் என்ற பெருமையுடன் வேட்பாளரை பேசும்படி அழைத்தார். 

 

தொடர்ந்து பேசிய இளங்கோவன், “நான் ஒன்னரை வருடமும், எனது மனைவி 10 வருடமும் இந்த மாவட்டத்தில் மருத்துவத் தொழில் செய்துள்ளோம். நான் மிக மிகக் குறைந்த அளவிலேயே சிகிச்சைக்கு கட்டணமாகப் பெறுவேன். அதிலும் பல பேர் எனக்கு காசு கொடுக்காமலேயே ஏமாற்றி விடுவார்கள். அந்த வகையில் நமது அமைச்சரைப் போலவே நானும் ஒரு ஏமாளி டாக்டர்” என்றார். இதைக் கேட்ட ர.ர.க்கள் யாரு ஏமாளி என்று சிரித்துக் கொண்டனர்.

 

pudukottai costituency  Candidate speak about minister vijayabaskar

 

தொடர்ந்து பேசிய எச்.ராஜா.. இந்த கூட்டணி இயற்கையாகவே அமைந்த கூட்டணி. அதனாலதான் பா.ம.க வந்ததும் தி.மு.கவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தி.மு.க ஒரு தீய சக்தி என்றார் வழக்கம் போல. தொடர்ந்து கோயிலில் தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கினார்கள். 

 

கூட்டணி கட்சி வேட்பாளர்கள் கூட்டணி கட்சிகளின் கொடிகளை தங்கள் காரில் பறக்கவிட்டு செல்வதால் கூட்டணி கட்சியினர் மன நிறைவுடன் தேர்தல் பணி செய்வார்கள் ஆனால் தே.மு.தி.க வேட்பாளர் அனைத்து கொடிகளையும் பறக்கவிட்டு வந்தார். ஆனால் எச்.ராஜா மட்டும் பா.ஜ.க கொடியுடன் வந்தார். இது பற்றி அங்கிருந்த சிலர் நம்மிடம்.. அண்ணன் பா.ஜ.க கொடி தவிற வேறு கொடிகளை தன் காரில் கட்டமாட்டார் என்றனர். அப்பறம் எப்படி கூட்டணியை அரவணைத்து போவார் எச் ராஜா.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.