Skip to main content

புதுக்கோட்டையில் ஆய்வு செய்ய பேராசிரியர் இனியனுக்கு மத்திய தொல்லியல்துறை அனுமதி

Published on 12/06/2020 | Edited on 15/06/2020

இந்தியாவிலேயே அதிக கல்வெட்டுகள் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பெரிய கோட்டையாக பொற்பனைக் கோட்டை அமைந்துள்ளது. அந்த கோட்டையை ஆய்வு செய்த ஆய்வாளா் சாந்தலிங்கம் அங்குள்ள செங்கல்களை பார்த்து உறுதி செய்துள்ளார்.

 

 Central Institute of Archeology


அதேபோல 3,500 ஆண்டுகள் பழமையான கற்கோடாரி கண்டெடுக்கப்பட்ட 170 ஏக்கர் பரப்பளவில் பரவிக் கிடக்கும் முதுமக்கள் தாழிகள், நிறைந்துள்ள வில்வன்னி ஆற்றங்கரையில் உள்ள அம்பலத்திடல், திருமயம் அருகில் உள்ள மலையடிப்பட்டியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட கல்பதுக்கைகள், கல்வட்டங்கள் காணப்படுகிறது.

அதேபோல கண்ணனூரில் 3.500 ஆண்டுகள் பழமையான நெடுங்கல் (மென்கிர்) காணப்படுகிறது. அவற்றை பாதுகாக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால உத்தரவும் போட்டுள்ளது. குடுமியான்மலை, திருமயத்தில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான செங்கோட்டு ஓவியங்கள், மலையடிப்பட்டி பாறைச் கிண்ணங்கள் ( குப்பியூல்ஸ் ) இதையெல்லாம் கடந்து குகை, குடைவரை, கற்றளிகள், நிறைந்துள்ளது. 

 

 Central Institute of Archeology


இதுவரை புதைவிடங்கள் அதிகம் காணப்பட்டாலும் வாழிவிடங்களை இன்னும் யாரும் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படி வெளியில் காணப்பட்ட பொருட்களை புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் வரலாற்று புதையல் மறைந்து கிடக்கும் மாவட்டமாக உள்ளது. அதனால் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே தொல்லியல் ஆய்வுகள் செய்து தமிழர்களின் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் என்று தொல்லியல் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் ஆர்வமுள்ள இளைஞர்களும் மத்திய, மாநில தொல்லியல் துறைக்கு பல வருடங்களாக கோரிக்கை மேல் கோரிக்கை வைத்துவருகின்றனர். ஆனாலும் அதற்கான உத்தரவு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு விளைநிலங்களாக மாறி வருகிறது.

 

 Central Institute of Archeology


இந்த நிலையில் தான் பண்டைய தொல்லியல் எச்சங்கள் நிறைந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் கள ஆய்வு செய்வதற்கு இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் அனுமதியை முனைவர் இனியன் (உதவி பேராசிரியர், வரலாறு மற்றும் சுற்றுலாவியல் புலம், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம்) அவர்களால் கோரப்பட்டது.

அதன் அடிப்படையில் முதல்கட்டமாக இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் அனுமதி அவருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக கள ஆய்வு கரோனா நோய் தொற்று வீரியம் குறைந்த பிறகு பல்கலைக்கழக அனுமதி பெற்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 Central Institute of Archeology


இவ்வாய்வின் மூலம் கண்டுபிடிக்கப் படும் தரமான தொல்லியல் எச்சங்களை வெளிப்படுத்தக்கூடிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த குறிப்பிட்ட இடங்களில் அகழாய்வு செய்வதற்கு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையிடம் அனுமதி கோரப்படும் என்றும் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் தொன்மை வரலாற்றை இந்த உலகமறிய வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என்பதிலும் ஐயமில்லை.

இந்த தகவல் அறிந்து பல வருடங்களாக கோரிக்கை வைத்து காத்திருந்த தொல்லியல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் முதல்கட்டமாக மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்ய அனுமதி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து அகழாய்வு செய்ய முழுமையான  அனுமதி கிடைக்க வேண்டும். அப்போது தான் முழுமையான வரலாற்றை வெளிக் கொண்டுவரமுடியும் என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.