Skip to main content

காணாமல் போகும் வரலாற்று சிறப்பு மிக்க மைல் கற்கள்!

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

புதுக்கோட்டை மாவட்டம் தொல்லியல் சான்றுகள் நிறைந்த மாவட்டம். மாவட்டத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் பல இடங்களில் பழமையான மைல் கல்களில்  தமிழ், அரபு, ரோமன் எண்கள் பொறிக்கப்பட்டுள்ளது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் எண்கள் நடைமுறையில் இருந்துள்ளது. கடந்த வாரம் கூட தஞ்சை மாவட்ட எல்லையில் மைல் கல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. 
 

Pudukkottai milestones issue

 

 

இப்போது தமிழ் மைல் கல்  கண்டுபிடித்துள்ள  இதே தொல்லியல் ஆய்வுக் கழகக்  தலைவர் மணிகண்டன் குழுவினர், "2014 ஆம் ஆண்டு தஞ்சாவூர் - புதுக்கோட்டை நெடுஞ்சாலையிலுள்ள கூழியான்விடுதி கிராமத்திலும்,  புதுக்கோட்டை -  விராலிமலை சாலையிலுள்ள  அன்னவாசல், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் தமிழ் - அரபு எண்கள் பொறிக்கப்பட்ட மைல்கல்லையும்,  தஞ்சாவூர் மாவட்டம் மாப்பிள்ளை நாயக்கன்பட்டியிலும் அடையாளம் கண்டனர். 

இந்த மைல் கற்கள்  18 ஆம் நூற்றாண்டில் நடப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர். இதில் தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அதாவது அக்கால தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்ட மாப்பிள்ளை நாயக்கன்பட்டியிலும் செங்கிப்பட்டியிலும் அரபு மற்றும் தமிழ் எண்களையும், புதுக்கோட்டை சமஸ்தான  நிர்வாகத்திற்குட்பட்ட  அன்னவாசல் மற்றும் கூழியான் விடுதி பகுதியிலிருந்த மைல் கற்கள் தமிழ் மற்றும் ரோமன் எண்கள் பொறிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

 



ரோமன் எண்களையும் தமிழ் எண்களையும்  பயன்படுத்தி இந்த மைல்கல் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம்  ஆங்கிலேயர் காலத்திலேயே தமிழ் எண்கள் அரசு மற்றும் பொதுமக்கள்  பயன்பாட்டில் இருந்துள்ளன என்பதை அறிந்துகொள்ளமுடிகிறது. இந்த  மைல் கற்கள் மூலம் பாதசாரிகள் மைல்கல்களில்  பொறிக்கப்பட்ட தமிழ் எண்களை அடையாளம் காணத்தெரிந்திருந்தனர் என்பதையும், சமீப காலமாகத்தான் தமிழ் எண்கள் பயன்படுத்துவது புழக்கத்திலிருந்து வழக்கொழிந்து போயிருக்கிறது என்பதையும் அறியமுடிகிறது" என்று கூறியிருந்தனர்.

தஞ்சை அரண்மனை மியூசியத்தில் ஆதனக்கோட்டை - தஞ்சாவூர் போக்குவரத்து மார்க்கத்தில் வைக்கப்படிருந்த மைல் கல் ஒன்று  பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் கூழியான்விடுதி தமிழ் மைல் கல்லை காண நாம் சென்று பார்த்த போது தற்போது வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த மைல் கல்லை காணவில்லை. மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பாக எடுத்துச் சென்றுள்ளதா என்றால் அப்படியும் தெரியவில்லை. அதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த காலங்களில் கண்டறியப்பட்ட தமிழ் எண்களுடன் கூடிய மைல் கல்களை மாவட்ட நிர்வாகம் மீட்டு அருங்காட்சியத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும். மேலும் கூழியான்விடுதி மைல் கல் என்ன ஆனது? யார் தூக்கிச் சென்றார்கள் என்பதை கண்டுபிடித்து மீட்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. 
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.