Skip to main content

ஏழு ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை விட்டு வெளியேறிய விவசாயி...குவியும் பாராட்டுக்கள்!

Published on 05/08/2019 | Edited on 05/08/2019

திருச்சி மாவட்டம் குளித்தலை முதலைப்பட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றத் சென்று உத்தரவு வாங்கி வந்த தந்தை, மகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இருந்த அரசு கட்டிடங்கள் பள்ளிகள், கோயில்கள், பள்ளிவாசல்கள், வீடுகள் உள்ளிட்ட கட்டங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் உள்ளது. இதனால் முத்துப்பேட்டையில் இருந்த 100 குளங்களில் தற்போது 15 குளங்கள் தான் உள்ளது. 

 

farmer who left seven acres of occupied land ... accumulating compliments!


அதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று முகமது மாலிக் என்ற இளைஞர் தன்னிச்சையாக நீதிமன்றம் சென்றார், தீர்ப்பை வென்றார். தமிழக அரசை அரசாணையே போட வைத்தது மாலிக் பெற்ற நீதிமன்ற உத்தரவு (அரசாணை எண் 540). அதன் பிறகு 3 நீர்நிலைகளில் இருந்த 85 வீடுகள், தனியார் பள்ளி, 2 பள்ளிவாசல்கள், ஒரு கோயில், பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடம் அகற்றப்பட்டது. அதன் பிறகும் அவரை விட்டு வைத்தால் மொத்த ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உத்தரவு பெற்று வருவார் என்ற எண்ணத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் கூட்டமைப்பு முகமது மாலிக்கை சுற்றி வளைத்து வெட்டியது. கொத்துக்கறியாக உடல் வெட்டுப்பட்டு ரத்தம் கொட்ட கொட்ட சிகிச்சை பெற்று மீண்டும் உயிருடன் வந்தார். அதன் பிறகு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்பு இவருக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் ஆணையிட்டது. இதனையடுத்து முகமதுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

 

farmer who left seven acres of occupied land ... accumulating compliments!

 

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தைச் சோந்த விவசாயி பாஸ்கரின் வீட்டுக்கு அருகில் உள்ள வேம்பங்குடி கிராமத்தில் பெரியகுளம் ஏரியில் உள்ள 7 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை தானாக விட்டுக் கொடுத்துவிட்டார். இது குறித்து பாஸ்கர் கூறும் போது, எனக்கு 15 ஏக்கர் பட்டா நிலம் உள்ளது. ஆழ்குழாய் கிணறு அமைத்து தென்னை, நெல் விவசாயம் செய்கிறேன். அத்தோடு அருகில் வேம்பங்குடி பெரிய குளம் ஏரியில் 7 ஏக்கர் நீர்நிலை புறம்போக்கையும் பிடித்து கரும்பு, மல்லிகை, நெல் விவசாயம் செய்கிறேன். தற்போது குடிமராமத்து பணிகளில் பெரிய குளம் வந்துள்ளதால் அதிகாரிகள் வந்து அளந்தார்கள் என்னிடம் 7 ஏக்கர் ஆக்கிரமப்பு நிலம் உள்ளதை அறிந்தேன். உடனே அந்த நிலத்தை விட்டு வெளியேறுவதாக அதிகாரிகளிடம் சொல்லிவிட்டேன்.

 

farmer who left seven acres of occupied land ... accumulating compliments!

 


அதாவது என்னிடம் உள்ள 15 ஏக்கர் நிலத்திலும் கிணற்றில் உள்ள தண்ணீர் இறைத்து விவசாயம் செய்து வந்தேன். அப்போது குளத்தில் தண்ணீர் இருந்தது. அதன் பிறகு ஆழ்குழாய் கிணறு. இப்ப அந்த ஆழ்குழாய் கிணற்றிலும் தண்ணீர் கீழே சென்றுவிட்டது. அதனால் குளத்தில் தண்ணீர் இருந்தால். நிலத்தடி நீர் மேலே வரும் என்பதை இப்ப உணர்கிறேன். அதனால் தான் தானாக வெளியேறிவிட்டேன். என்னைப் போல ஒவ்வொரு விவசாயியும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை விட்டு வெளியேறி நீர்நிலைகளை உயர்த்த வேண்டும். அப்போது தான் நமது அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை விட்டு செல்ல முடியும் என்றார். விவசாயி பாஸ்கரின் இந்த செயலை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். இதே போல ஒவ்வொரு ஆக்கிரமிப்பாளரும் ஆக்கிரமிப்புகளை விட்டுக் கொடுத்தால் பிரச்சனையின்றி நீர்நிலைகளை உயர்த்தி நிலத்தடி நீரை உயர்த்தலாம், விவசாய செழிக்கும், குடிக்க தண்ணீர் கிடைக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.








 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.