Skip to main content

பெண்களை வசியம் செய்ய ஆலோசனை சொன்ன பெண் மந்திரவாதி உதவியாளருடன் கைது!

Published on 04/06/2020 | Edited on 04/06/2020


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தில் கடந்த மே மாதம் 18ஆம் தேதி வித்யா என்ற சிறுமி குடிதண்ணீர் எடுக்கக் குளத்திற்குச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. பின்னர் அவரது குடும்பத்தினர் தேடியுள்ளனர். சுமார் அரை கி.மீ. தூரத்தில் கழுத்து நெறிக்கப்பட்டு வாய்ப் பேச முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அவரது தாயார் இந்திரா மற்றும் சகோதரிகள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரழந்தார். 
 


சிறுமியைக் கொன்றவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று மாதர் சங்கம் போராட்டம் அறிவித்தது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுமுகம் மற்றும் பா.ஜ.க.வினர் அவர்களின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் சொன்னதுடன் கொலையாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வந்தனர். அப்போது சந்தேகப்பட்ட 6 இளைஞர்களை போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து சிறுமியின் தந்தை பன்னீர் நடந்து கொண்ட விதம் போலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் சிறுமியின் தாய் இந்திரா போலிசார் விசாரனையில் சிறுமி அடிப்பட்டு கிடந்த இடத்தைக் கணவர் பன்னீர் தான் எங்களிடம் சொன்னார் என்று கூறியதால் மேலும் சந்தேகம் வலுக்க பன்னீரை பிடித்த போலிசார் கவணித்து விசாரித்தனர். 
 

 


அப்போது தான் திடீர் பணக்காரன் ஆக தனக்கு முன்பே பழக்கமான புதுக்கோட்டை மாலையிடு மந்திரவாதி வசந்தியின் ஆலோசனைப்படி பூஜைகள் செய்து பிறகு, மகளை தான் மற்றும் தன் இரண்டாவது மனைவி மூக்காயி அவரது உறவினர் குமார் ஆகியோர் கழுத்தை நெறித்து கொன்றோம். மறு நாளும் பூஜை செய்தோம் பூஜைக்கு உதவியாக தனது முன்னாள் சித்தாள் முருகாயி இருந்தார். திடீர் பணக்காரன் என்பது ஒரு பக்கம் மற்றொன்று எனக்குப் பெண்கள் மீதான ஆசை அதிகம் அதனால் மகளைக் கொன்று பூஜை செய்தால் மேலும் பெண்களை வசியம் செய்து எனது ஆசையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றதால் பெற்ற மகளைக் கொன்றோம் என்று கூறியுள்ளார். போலிசார் பன்னீரை பிடித்து விசாரனை செய்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி இரண்டாவது மனைவி மூக்காயி மர்மமாக இற்ந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பன்னீர் மற்றும் குமாரை கைது செய்த போலிசார் அவர்களின் வாக்குமூலத்தின்படி பெண் மந்திரவாதி வசந்தி மற்றும் உதவியாளர் முருகாயி ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கில் சம்மந்தப்பட்டவர்களைத் துரிதமாகப் பிடித்த தனிப்படை போலிசாரை எஸ்.பி. அருண்சக்திகுமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.