Skip to main content

ஒரே நாளில் அடுத்தடுத்த சாலை விபத்துக்கள்...6 பேர் பலி...அதிர்ச்சியில் புதுக்கோட்டை மக்கள்!

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக திருட்டு சம்பவங்கள் மக்களை அச்சுறுத்தியது. இன்று ஆங்காங்கே நடந்த கோர விபத்துகளில் 6 பேர் பலி, 45 பேருக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் புதுக்கோட்டை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று (புதன் கிழமை) மாலை திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் நார்த்தாமலை அருகே வேகமாக சென்று கொண்டிருந்த ஒரு இன்னோவா கார் பின்பக்கம் சக்கரத்தின் அச்சு உடைந்து பக்கமாக வந்த காரில் மீது மோத அடுத்தடுத்து பின்னால் வந்த 7 கார்கள் மோதிக் கொண்டது. ஹாலிவுட் படங்களில் வரும் விபத்து போல அந்த கோரச் சம்பவம் நடந்துள்ளது.

 

PUDUKKOTTAI INCIDENT CONTINUE ONE 6 PEOPLES DIES 43 PEOPLES ADMIT AT HOSPITAL


இந்த கோர விபத்தில் தொடையூர் சிதம்பரம், உடையாணிப்பட்டி ரெங்கராஜ், வேகுப்பட்டி நாகரத்தினம், மற்றும் நாகலெட்சுமி, செல்வம் என 5 பேர் உயிரிழந்தனர். 21 பேர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுக்கோட்டை எஸ்.பி. செல்வராஜ் மீட்பு பணிகளை முடுக்கி விட்டார். அந்த வழியாக வந்தவர்களும், போலீசாருடன் இணைந்து ஈடுபட்டனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  

 

PUDUKKOTTAI INCIDENT CONTINUE ONE 6 PEOPLES DIES 43 PEOPLES ADMIT AT HOSPITAL

 

 

அதேபோல் புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் உள்ள உள்ள தனியார் கல்லூரி முடிந்து பேருந்துக்காக காத்திருந்த மாணவிகள் மீது அந்த வழியாக வேகமாக சென்ற கார் மோதிய விபத்தில் 4 மாணவிகள் படுகாயத்துடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் அறந்தாங்கி கோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் மீது ஒரு தனியார் பேருந்து மோதி தலை நசுங்கி அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

 

PUDUKKOTTAI INCIDENT CONTINUE ONE 6 PEOPLES DIES 43 PEOPLES ADMIT AT HOSPITAL

 

 

பொன்னமராவதி அருகில் உள்ள சத்தியமூர்த்திபுரம் புறகரைப்பட்டியிலிருந்து ரஞ்சித் (30) என்பவரின் மினி வேனில் 30 பேர் மேக்கினிப்பட்டி கிராமத்திற்கு துக்கம் விசாரிக்கச் சென்றனர். அந்த மினி வேன் திடிரென்று கவிழ்ந்து 20 பேர் படுகாயமடைந்தனர். அதில் 10 பேர் பொன்னமராவதி அரசு மருத்துவமனையிலும், 10 பேர்  புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஒரே நாளில் மட்டும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும்  அடுத்தடுத்து நடந்த கோர விபத்துகளில் 6 பேர் பலியானதுடன் 45 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 








 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.