Skip to main content

நீர்நிலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை உயர்நீதிமன்ற நீதிபதி பாராட்டி கௌரவப்படுத்தினார்!

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம் ஒன்றியத்தில் உள்ள கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களான கொத்தமங்கலம், வடகாடு, சேந்தன்குடி, மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீரை உயர்த்த நீர்நிலைகளை சீரமைக்கும் பணியில் அந்தந்த கிராம இளைஞர்கள், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணிக்காக பலரும் நிதி மற்றும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். தூர்வாரப்பட்டுள்ள குளம், ஏரி, வாய்க்கால்களின் கரைகளில் மரக்கன்றுகளும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 

 

 

 Hydrological conditioning congrats in high court judge visit place

 


இளைஞர்களின் இந்த பணியை பார்த்து பல்வேறு கிராமங்களிலும் நீர்நிலை சீரமைப்புப் பணிகளை இளைஞர்கள் முன்னெடுத்துள்ளனர். மேலும் பலதரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் நீர்நிலை சீரமைக்கப்பட்டுள்ள சேந்தன்குடி, கொத்தமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அந்த நீர்நிலைகளில் மரக்கன்றுகளை நட்டதுடன் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்த அவர்களுக்கு பொன்னாடைகள் அணிவித்து பாராட்டு தெரிவித்தார். 

 

 Hydrological conditioning congrats in high court judge visit place

 

மேலும் கொத்தமங்கலத்தில் இளைஞர்களால் வாங்கப்பட்டுள்ள நீர்நிலைகளில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற வசதியாக தண்ணீர் குடங்களை வைத்து தள்ளிச் செல்லும் வண்டிகளை அதற்கான பணியாளர்களிடம் ஒப்படைத்தார். 

 

 Hydrological conditioning congrats in high court judge visit place

 


தொடர்ந்து இளைஞர்களிடம் பேசும் போது நிலத்தடி நீரை பாதுகாக்க நீர்நிலைகள் மிகவும் அவசியம். அந்தப் பணிகளில் இளைஞர்கள் ஈடுபட்டிருப்பதும், சொந்த செலவில் சீரமைத்து மரக்கன்றுகள் வளர்ப்பதும் சிறப்பான பணியாக உள்ளது. இந்த கிராமங்களைப் பார்த்து பல கிராமங்களிலும் இளைஞர்கள் நீர்நிலை சீரமைப்பு பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். மேலும் உங்கள் பணிகள் தொடர வேண்டும் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.