Skip to main content

மின்னல் தாக்கி விவசாய தொழிலாளர்கள் 4 பேர் பலி.

Published on 15/10/2019 | Edited on 15/10/2019

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (15/10/2019) காலை முதல் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டத்து. பல இடங்களில் மிதமான முதல் கனமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் அருகில் உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் கடலை தோட்டத்தில் 20- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். 

pudukkottai heavy rain incident peoples admit hospital


அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் கலைச்செல்வி, லட்சுமி, சாந்தி, விஜயா உள்பட 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டு மயங்கிய நிலையில் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்