Skip to main content

உளவுத்துறை அதிகாரிகள் கொடுத்த ஷாக்! போலீஸை குவித்து ஹெலிகாப்டரை வரவழைத்த எடப்பாடி பழனிசாமி!

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
ops - eps - minister



கஜா புயல் பாதிப்பு குறித்து திங்கள்கிழமை துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக தனி அதிகாரிகளை நியமித்து அவர்கள் அங்கு சென்றுள்ளனர். அவர்களிடம் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதிகாரிகளால் மக்களை சமாதானப்படுத்த முடியவில்லை. புயலால் மரங்கள் சாலைகளில் விழுந்து கிடக்கின்றன. அப்புறப்படுத்த போதிய பணியாளர்கள் இல்லை. நிவாரணப் பொருட்களும் சென்றடைய சிரமமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். 
 

ஆலோசனையில் பங்கேற்ற அமைச்சர்களும், எங்களையே சூழ்ந்துகொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். வேண்டுமென்றே தினகரன் ஆட்களும் உள்ளே புகுந்து எங்களுக்கு எதிராக பேசுகின்றனர். மக்களை தூண்டிவிடுகிறார்கள். நாங்கள் இனி அங்கு செல்ல வேண்டும் என்றால் எங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் செல்ல முடியும் என்று கூறியுள்ளனர்.
 

உளவுத்துறை அதிகாரிகளை அழைத்து, நிலவரம் எப்படி இருக்கிறது என்று கேட்டுள்ளார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர்கள், நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. பாதிப்பு அதிகம். ஆனால் உண்மையான பாதிப்புகளை முதலில் அரசே குறைத்து வெளியிட்டதால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்சாரம் அறவே துண்டிக்கப்பட்டுள்ளது. பத்து நாள் ஆனாலும் மின்சார விநியோகம் நடப்பது கடினம்தான் என கூறியுள்ளனர்.
 

பாதித்த பகுதிகளை உடனே பார்க்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சொல்கின்றனர். ஆகையால் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் சந்திக்க ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு, முகாமுக்கு சென்றால் மக்கள் எந்த நேரத்தில் என்ன பேசுவார்கள் என்று தெரியாது. பிறகு உங்கள் விருப்பம் என்று தெரிவித்துள்ளனர். 
 

அப்போது குறுக்கிட்ட அமைச்சர்கள், நாங்க போனபோது காரை மறித்து மறியல் செஞ்சாஞ்க, நீங்க போனா மட்டும் மறிக்க மாட்டாங்களா? மறியல் செய்து, கேள்வி மேல கேள்வி கேட்டு நகர விடாம பண்ணியதால், நம்ம ஓ.எஸ்.மணியன் காரை அப்படியே விட்டுவிட்டு, பைக் ஒன்றில்தான் அங்கிருந்து வெளியே வந்திருக்கிறார் என்று கூறியுள்ளனர்.
 

இவற்றையெல்லாம் கேட்ட பழனிசாமி, புதுக்கோட்டை உள்ளிட்ட சில இடங்களை தேர்வு செய்யுங்கள். போலீசாரை அங்கு நிறுத்துங்கள். நமக்கு எதிரானவர்களை நெருங்க விடவேண்டாம். பாதிக்கப்பட்ட நம்ம கட்சிக்காரங்களை மட்டும் அழைத்து நிவாரணப் பொருட்களை கொடுத்து, குறைகளை கேட்போம். ஹெலிகாப்டரில் செல்வோம். அங்கிருந்து எங்கேயாவது காரில் போகிற மாதிரி இருந்தால் மறியல் நடக்காமல் இருக்க போலீசார் குவித்து வையுங்கள் என்று உத்தரவிட்டு இன்று அதன்படி புதுக்கோட்டை சென்று பாதிப்பட்ட பகுதிகளை பார்வையிட்டிருக்கிறார். 
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.