Skip to main content

தனியார் கல்லூரி வாகனம் மோதி சிறுமி பலி, சிறுவன் கால் துண்டானது!

Published on 10/12/2019 | Edited on 11/12/2019

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அறிவொளி நகர் ( நரிக்குறவர் காலனி) யை சேர்ந்தவர் சுரேஷ் வயல்களில் எலிப்பொறி வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். அவருக்கு வசந்தி என்ற மனைவியும், தேவா (வயது 9), சுகந்தி (வயது 4) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். தேவா கீரமங்கலம் வடக்கு பள்ளியில் 4 ம் வகுப்பும், சுகந்தி அதே பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடியிலும் படிக்கிறார்கள். 


இந்த நிலையில் சுரேஷ் மற்றும் தேவா ஆகிய இருவரும் ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்திருப்பதால் பள்ளி முடிந்த நிலையில் மாலை நேர விரதம் முடிப்பதற்காக கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் குளத்திற்கு 4 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் குளிக்கச் சென்றனர். பேருந்து நிலையம் அருகே சென்ற போது புதுக்கோட்டை வெங்கடேஷ்வர பாலிடெக்னிக் கல்லூரி வேன் மாணவர்களை இறக்கிவிட்டு பேருந்து நிலையம் அருகே வந்த போது எதிர்பாராமல் நடந்த விபத்தில் சுரேஷ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி ஏறி நின்றது. 

PUDUKKOTTAI DISTRICT PRIVATE COLLEGE VAN AND BIKE INCIDENT POLICE


அதில் மாணவன் தேவா கால் மாட்டிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த அப்பகுதியில் நின்றவர்கள் வேனை மீண்டும் எடுக்க சொன்ன பிறகு வேன் நகர்த்தப்பட்டது. உடனே அந்தப் பகுதியில் நின்ற கார், வேன் ஓட்டுநர்கள் காயமடைந்த தேவா மற்றும் சுகந்தியை ஒரு காரில் ஏற்றிக் கொண்டு கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற போது அங்கே சிகிச்சை அளிக்க யாரும் இல்லை. 


அதனால் அதே காரில் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக் கொண்டு சென்றனர். ஆனால் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் சுகந்தி இறந்துவிட்டதாக சொன்னார்கள். தொடர்ந்து தேவாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பிறகு அங்கு கூடிய மக்கள் பார்த்த போது, அந்த மோட்டார் சைக்கிளில் மாணவன் தேவாவின் துண்டான கால் இருப்பதை பார்த்தனர். அதன் பிறகு மற்றொரு வாகனத்தில் எடுத்துச் சென்றனர். 


அந்த துண்டான கால் பகுதியை பொறுத்தும் சிகிச்சையும் நடப்பதாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய தனியார் கல்லூரி வேன் ஓட்டுநர் புதுக்கோட்டை விடுதியை சேர்ந்த ஆறுமுகத்தை கீரமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த தலைமுறை தான் பள்ளிக்கு சென்று படிக்க தொடங்கி இருக்கிறார்கள் அறிவொளி நகர் மக்கள். அவர்களுக்கு இப்படி ஒரு சோகம் நடந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.