/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/old man3_0.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையா (வயது 98). இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளன. இவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்துவைத்துவிட்டு தனியாக வசித்து வருகிறார்செல்லையா. இவரின் மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். செல்லையா மட்டும் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து தனியாக வசித்து வருகிறார்
.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/old man 2.jpg)
தன்னுடைய பிழைப்பிற்காக 98 வயதிலும் பனைமரம் ஏறி நுங்கு வெட்டி இறக்கி வியாபாரம் செய்து, அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வருகிறார். இந்தச் செய்தியை கடந்த சில தினங்களுக்கு முன்பு நக்கீரன் இணைய தளத்தில் வீடியோவாக வெளியிட்டு இருந்தோம். மேலும் அவருக்கு உதவித் தொகை கிடைக்கவும் கோரிக்கை வைத்திருந்தோம். இதைப் பார்த்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி, செல்லையா பற்றிய தகவல்களை வருவாய்த்துறையினர் மூலம் அறிந்து, அந்த முதியவருக்கு மாதாந்திர முதியோர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்றுமுதியவரை நேரில் அழைத்து உதவித்தொகைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் நேரில் வழங்கினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/c89999.jpg)
மேலும் தள்ளாத வயதிலும் உழைப்பை நம்பி வாழும் முதியவருக்கு முதியோர் உதவித் தொகை கிடைப்பதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்குகிறார். இதுகுறித்து கொத்தமங்கலம் கிராம மக்கள் கூறும்போது, "பல வருடங்களாகத் தள்ளாத வயதையும் பொருட்படுத்தாமல் பனைமரம் ஏறி நுங்கு வெட்டி விற்பனை செய்து வாழ்ந்து வந்த முதியவருக்கு நக்கீரன் இணையச் செய்தி மூலம் நிவாரணம் கிடைக்கச் செய்திருப்பது பாராட்டத்தக்கது" என்றனர்.
Follow Us