Skip to main content

விமான விபத்து என்று வதந்தி பரவிய கண்மாயில் எரிந்தது என்ன? கரிம சோதனை முடிவுகள் என்னாச்சு? 

Published on 12/07/2020 | Edited on 12/07/2020

 

pudukkottai district incident peoples officers

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுகா மேல வசந்தனூர் கிராமத்தில் உள்ள வசந்தனூர் கண்மாயில் கடந்த மாதம் 12- ஆம் தேதி காலை போர் விமானம் ஒன்று திடீரென விழுந்து எர்ந்து கொண்டிருப்பதாக காட்டுத் தீ போல தகவல் மற்றும் படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. 

 

ஆனால் அந்தப் பகுதியில் சூப்பர் சோனிக் விமானம் வந்து சென்ற பிறகு கண்மாயில் இருந்த கருவேல மரங்கள், புல், செடிகள் எரிந்தது. விமானம் விழவில்லை. விபத்தும் இல்லை என்பதை அந்த கண்மாயில் நின்ற நம் வாசகர்கள் மூலம் அறிந்து நக்கீரன் இணையத்தில் அழுத்தமாக சொன்னோம். 

pudukkottai district incident peoples officers

அதன் பிறகு அதிகாரிகள் சென்று விமான விபத்து இல்லை. கண்மாயில் கருவேல மரங்களும், புல், செடிகளும் எரிந்துள்ளது. அதனை யாரோ விமான விபத்து என்று வதந்தி பரப்பிவிட்டனர் என்றனர். வதந்தி பரப்புவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியும் அறிவித்தார்.

 

அதன்படி கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அநத புகாரில்.. மேல வசந்தனூர் கண்மாயி்ல் விமானம் விழுந்து எரிந்ததாக படங்களுடன் வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

pudukkottai district incident peoples officers

இந்த நிலையில் தான் விமானம் விழுந்து எரியவில்லை என்றால் கண்மாயில் பல இடங்களில் திட்டுத் திட்டாக எரிந்தது எப்படி? என்ற சந்தேகத்தை போக்க தடய அறிவியல் துறையின் சார்பில் எரிந்த இடங்களில் ஆய்வு செய்து சாம்பல்களை சேகரித்துச் சென்றனர். அந்த சோதனையில் தீ பற்றியது எப்படி என்பது பற்றி அறிந்து கொள்ள முடியும் என்பதால் மாதிரிகள் எடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த சோதனை முடிவுகள் வெளியிடவில்லை. அதனால் எப்படி தீ பற்றியது என்பது பற்றி தெரியவில்லை. இந்த ஆய்வு முடிவு வெளியானால் மட்டுமே அந்த பரபரபான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். எப்போது முடிவுகள் வெளியாகும்?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.