Advertisment

இறுதி ஊர்வலத்திற்கு வந்த 'சொர்க்க ரத' ஓட்டுனர் உயிரிழப்பு!

pudukkottai district incident driver

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகில் உள்ள ஆயிங்குடி பட்டிணக்காடு பகுதியில் இன்று (16/04/2021) ஒருவர் இறந்ததால், அந்த வீட்டிற்கு தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள மேல ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்த டிரம்ஸ் வாசிப்பவர்கள், சடலம் வைக்கும் ஃபிரீசர் பாக்ஸ், இறுதி ஊர்வலத்திற்கான சொர்க்க ரதம் ஆகியவற்றுடன் மேல ஒட்டங்காடு கலியமூர்த்தி மகன் சக்தி வாகனத்தை ஓட்ட 6 பேர் வந்துள்ளனர்.

இன்று (16/04/2021) மாலை சடலம் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஃபிரீசர் பாக்ஸ் ஏற்றிக் கொண்டு சொந்த ஊருக்குச் செல்ல ஓட்டுநர் சக்தி சொர்க்க ரதத்தை திருப்பியுள்ளார். மற்றவர்கள் வாகனத்தை திருப்புவதற்காக வாகனத்தில் ஏறாமல் காத்திருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் தாழ்வாகச் சென்ற மின்கம்பியில் சொர்க்க ரதத்தின் கும்பத்தில் உரசி மின்சாரம் பாய்ந்து ஓட்டுநர் சக்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப் பார்த்த அனைவரும் கதறி அழுதனர். துக்க வீட்டுக்குச் சொர்க்க ரதம் ஓட்ட வந்தவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் அறித்து அறந்தாங்கி காவல்துறையினர் விசாரணைசெய்து சடலத்தை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு ஓட்டுநர் பாண்டிக்குடி ராமநாதன் ஓட்டும் அமரர் ஊர்தியில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

driver incident pudukkottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe