Skip to main content

காரில் கஞ்சா கடத்திய பெண் உள்பட 3 பேர் கைது!

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

புதுக்கோட்டை மாவட்டத்தில் மது போதையைவிட மாற்றுப் போதைக்கு இளைஞர்களை ஒரு பெரிய கும்பல் மாற்றி வருகிறது என்பதை அறிந்த போலீசார் மாற்றுப் போதைக்காக மாத்திரை, ஊசிகளை விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து வருகின்றனர். கடந்த மாதம் புதுக்கோட்டையில ஒரு பெண் வலி நிவாரணி மருந்து மாத்திரைகளை இளைஞர்கள், மாணவர்கள்  குறிவைத்து போதை ஊசிகளாக விற்று வந்ததையடுத்து கைது செய்யப்பட்டார்.


அதை தொடர்ந்து 15 நாட்களுக்கு முன்பு அறந்தாங்கி அருகில் உள்ள அரசர்குளம் பகுதியில் இளைஞர்களிடம்  போதைக்காக மாத்திரை விற்க வந்த புதுக்கோட்டை முன்னாள் ஆணழகன் ரியாஸ் கான், ஜெகன் ஆகிய இருவரையும் நாகுடி எஸ்.ஐ நவீன் கைது செய்தார். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேலும் பலர் அந்த கும்பலில் இருப்பதையறிந்து அறந்தாங்கி டிஎஸ்பி கோகிலா தலைமையிலான குழுவினர், புதுக்கோட்டையில் பதுங்கியிருந்த ஒரு பெண் உள்பட 4 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்த 2500 மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனர். 

PUDUKKOTTAI DISTRICT ALCOHOL WOMEN AND ANOTHER 3 PERSON ARRESTED POLICE

அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் புதுக்கோட்டையில் மேலும் பலர் பதுங்கியிருந்து போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்வது தெரிய வந்தது. இந்த தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட எஸ் பி செல்வராஜ் தனிக்குழு அமைத்து ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருக்கோகர்ணம் காவல் நிலைய எல்லையில் மியூசியம் பகுதியை சேர்ந்த 6 பேர் மாத்திரைகள் விற்பதை கையும் களவுமாக பிடித்தனர். இதன் பிறகு மத்திய புலனாய்வு துறையும் இணைந்து களமிறங்கி மாற்றுப் போதைக்கு இளைஞர்களை அடிமையாக்கும் கும்பலை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
 

இந்த நிலையில் தான் இன்று ஒரு காரில் கஞ்சா கடத்தி செல்வதாக கிடைத்த தகவலின் படி அறந்தாங்கி டிஎஸ்பி கோகிலா உத்தரவின் பேரில் அறந்தாங்கி ஆய்வாளர் ரவீந்திரன், உதவி ஆய்வாளர் ராமன், போலிசார் ரமேஷ், பாரதி, முத்துக்குமார்ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டி என் 68 எல் 0020 என்ற ஸ்விப்ட் காரில் ஒரு பெண் உள்பட 3 பேரும் முன்னுக்கு பின் முறணாக பதில் சொன்னதால் காரை சோதணை செய்த போது காரில் 10 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

PUDUKKOTTAI DISTRICT ALCOHOL WOMEN AND ANOTHER 3 PERSON ARRESTED POLICE



உடனே காரில் இருந்த தஞ்சை அம்மன்பேட்டை ராதாகிருஷ்ணன் மனைவி பாண்டியம்மாள் (வயது 40),  தஞ்சை மாரியம்மன் கோயில் கொமுட்டி தெரு மாயாண்டி மகன் காசிமாயன் (34),  தஞ்சை மாரியம்மன் கோயில் சாலைக்காரத்தெரு கௌரிசங்கர் மகன் சரபோஜி (29) ஆகிய மூவரையும் கைது செய்து, கார் மற்றும் காரில் இருந்த 10 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக இளைஞர்களை சீரழிவுக்கு காரணமாக உள்ள மாற்றுப் போதை பொருட்களை விற்கும் கும்பல் பிடிக்கப்பட்டு வருவது, அதிர்ச்சியளிப்பதுடன், மொத்த கும்பலையும் கைது செய்து புதுக்கோட்டையை மாற்றுப் போதையிலிருந்து மீட்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.