Skip to main content

தமிழக வேலை தமிழருக்கே... அரசுக்கு எதிராக திரண்ட பட்டதாரி இளைஞர்கள்!

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

தமிழ்நாடு அரசு வேலைகளைக் கூட அனைத்து மாநிலத்தவர்களுக்கும் வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டில் கோடிக்கணக்காண இளைஞர்கள் படித்து படடங்களை வாங்கி வைத்து விட்டு வேலை இல்லாமல் தவிக்கும் நிலையில் தான் தமிழக அரசு இப்படி வஞ்சிக்கிறது. மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில பணிகளில் 100 சதவீதமும் அந்த மாநிலத்தவருக்கே.. மத்திய அரசு வேலையில் 80 சதவீதம் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவருக்கே என்பதில் உறுதியாக இருக்கும் போது, தமிழகத்தில் மட்டும் யார் வேண்டுமானாலும் வந்து வேலை செய்யலாம் என்று சொல்வது தமிழக இளைஞர்களுக்கு அரசாங்கம் செய்யும் கொடுமை.
 

PUDUKKOTTAI DEGREE HOLDERS STRIKE NEED FOR JOB



இந்த நிலையில் தான் தமிழக அரசியல் கட்சிகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் முடிவுகளை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தனர். ஆனால் இதற்கு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் களமிறங்கினால் தான் அரசுகள் கவனிக்கும் என்ற நிலை இருந்தது. தமிழக அரசு விதியை மாற்று என்ற முழக்கத்துடன்.. முதல் கட்டமாக புதுக்கோட்டை காந்தி பேரவை சார்பில் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை ஒன்றிணைத்து பிரமாண்டமான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். 


புதுக்கோட்டை திலகர் திடலில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், சுமார் 500 பட்டதாரி இளைஞர்கள், இளம் பெண்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முழக்கமிட்டனர். மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் 100 சதவீதம் தமிழர்களுக்கே.. மத்திய அரசுப் பணியில் 90 சதவீதம் தமிழர்களுக்கு வழங்க வேண்டும். குரூப் 2, குரூப் 2 ஏ ஆகிய தேர்வுகளை ஒன்றாக இணைத்திருப்பதை திரும்ப பெற வேண்டும், போட்டித் தேர்வுகளில் தமிழ் வினாக்களை மாற்றாதே போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கையெழுத்து இயக்கமும் நடந்தது.
 

PUDUKKOTTAI DEGREE HOLDERS STRIKE NEED FOR JOB


இது குறித்து பட்டதாரிப் பெண்கள் கூறும் போது, தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை ஏமாற்றும் விதமாக அரசு செயல்படுகிறது. அடிக்கடி தேர்வு முறைகளை மாற்றுவது, தமிழர்களுக்கான வேலை வாய்ப்புகளை தமிழர் அல்லாதவர்களுக்கு வழங்கி எங்களை வஞ்சிக்கிறார்கள். இந்த முறைகளை மாற்ற அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று (18/10/2019) புதுக்கோட்டையில் தொடங்கிய போராட்டம் அடுத்து தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள். மீண்டும் ஒரு உரிமைக்கான போராட்டத்தை தமிழகம் சந்திக்கும் என்றனர். 




 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.