Skip to main content

சிஏஏ சட்டநகல் எரிக்கும் போராட்டம்....  ஆயிரம் பேருக்கு மேல் திரண்டதால் பரபரப்பு !

Published on 14/03/2020 | Edited on 14/03/2020


குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில், சட்டத்தைத் திரும்ப பெற முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துவருகிறது.
 

இதனால் தொடர் போராட்டங்கள் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. நூதன போராட்டங்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. வேறு எந்தப் போராட்டத்திற்கும் இல்லாத அளவில் இஸ்லாமிய பெண்கள் குழந்தைகளுடன் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றனர். எதிர்க்கட்சிகள் அனைத்து போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிப்பதுடன், பொதுக் கூட்டங்களும் நடத்தி வருகின்றனர். ஏப்ரல் மாதத்தில் மாநாடுகளும், உப்புச் சத்தியாகிரகம் தொடங்கிய நாளில் மீண்டும் அதே வழித்தடத்தில் திருச்சி முதல் வேதாரண்யம் வரை சமூக நீதியை மீட்க நடைபயணத்திற்கும் அனைத்துக் கட்சியினரும் தயாராகி வருகின்றனர்.


 

pudukotttai caa...

 

சிஏஏவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தயங்கி வரும் தமிழக அரசு போராட்டக் காரர்களை சமாதானம் செய்யும் விதமாக இந்த திருத்தச் சட்டத்தால் எந்த பாதிப்பும் வராது என்று மத்திய அரசு சொல்கிறது என்று சொல்லி வருகிறது. இதனை மீண்டும் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர்களிடம் விளக்க கலந்துரையாடல் சந்திப்புக்கும் அழைப்பு கொடுத்திருக்கிறார்கள்.
 

ஆனால் நாளுக்கு நாள் போராட்டங்களில்.. சிறைக் கம்பிகளுக்குள் இளைஞர்கள், முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழர்கள் அகதிகளாக அடைக்கப்பட்ட முகாம்கள் என தொடங்கிய நூதனப் போராட்டங்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்குகளை முடித்துக் கொள்வது. வங்கியில் இருந்து பணத்தை எடுப்பது போன்ற போராட்டங்களில் ஆயிரம் ஆயிரமாக கலந்து கொண்டனர்.
 

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் தொடர் போராட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தை அறிவித்தனர். போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பியதுடன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊராட்சி குப்பைத் தொட்டியில் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு திருத்திய சட்டத்தை திரும்ப பெறும் வரை இதே போல அடுத்தடுத்த போராட்டங்கள் தொடரும் என்றனர் போராட்டக்குழுவினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.