Skip to main content

25 ஆண்டுகளுக்கு பிறகு இளைஞர்கள் சீரமைத்த பாசன வாய்க்கால்...மறு சீரமைப்பிற்கு ஒதுக்கப்படட நிதியில் உடனடியாக பணியை தொடங்க கோரிக்கை!

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சன்விடுதியில் இருந்து தான் கடைமடைப் பகுதிகளான நாகுடி வாய்க்கால், செருவாவிடுதி வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். முறையாக தண்ணீர் இந்த இடத்தில் இருந்தே திறக்கப்படும். அதே இடத்தில் தான் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், குரும்பிவயல், முடுக்குவயல் வழியாக சுமார் 5 கி.மீ தூரத்திற்கு பாசனத்திற்காக வந்து கொண்டிருந்த வாய்க்கால் சீரமைப்பு இல்லாமலும், ஆக்கிரமிப்பாலும் காணாமல் போய் இருந்தது. 

 

PUDUKKOTTAI  After 25 years, youth Irrigation Request to resume work immediately with funds allocated

 

 


இதனைப் பார்த்த நெடுவாசல் இளைஞர் மன்றத்தினர் மற்றும் பாசனம் பெறும் விவசாயிகள் இணைந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு தங்களின் சொந்த செலவில் வாய்க்காலை தூர்வாரி சீரமைத்து தண்ணீரை கொண்டு வந்தனர். அந்த வாய்க்காலில் தண்ணீர் வந்ததால் நெடுவாசல் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதில் சுமார் 1.5 கி.மீ தூரத்திற்கு சீரமைக்கப்படாமல் உள்ளது. 

 

 

இந்த நிலையில் கிராம விவசாயிகள், இளைஞர் மன்றத்தினர் சம்மந்தப்பட்ட வாய்க்காலை மறு சீரமைப்பு செய்யவும், சீரமைக்காமல் உள்ள வாய்க்காலை சீரமைக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை கல்லணை கோட்ட அதிகாரிகள் ரூ. 3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். இந்தப் பணியால் இந்த ஆண்டு தண்ணீர் கொண்டு வந்து பாசனத்திற்கு மட்டுமின்றி நெடுவாசல் பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீரை நிரப்பினால் நிலத்தடி நீரை உயர்த்த முடியும் என்கிறார்கள் விவசாயிகள்.

 

PUDUKKOTTAI  After 25 years, youth Irrigation Request to resume work immediately with funds allocated

 

 

மேலும் சில மாதங்களுக்கு முன்பு நிதி ஒதுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. தற்போது காவிரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் சில நாட்களுக்குள் கல்லணையில் தண்ணீர் நிரம்பி உடனடியாக தண்ணீர் திறந்தால் சீரமைக்கப்படாமல் உள்ள வாய்க்காலில் தண்ணீர் வராமல் போகும். அதனால் வாய்க்கால் சீரமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தி உடனடியாக தூர்வாரினால் பாசனத்திற்கும், நெடுவாக்குளம், உள்ளிட்ட குளம், ஏரிகளில் தண்ணீரை நிரப்பலாம். அதனால் தான் நெடுவாக்குளத்தை நெடுவாசல் நீர்பாசனக்குழுவினரே சொந்த செலவில் சீரமைத்து வருகிறோம். ஆகவே உடனடியாக பணிகள் தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் வந்த பிறகு பணிகள் முழுமையாக செய்வது கடினமாக இருக்கும் என்றனர்.






 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.