Skip to main content

மகளைக் கொன்று சிறைக்குச் சென்ற தந்தை... மர்மமாக இறந்த தாய்... ஆதரவற்று நின்ற பெண்குழந்தைகள்... ஆதரவு கரம் நீட்டிய போலீஸார்!

Published on 19/06/2020 | Edited on 19/06/2020

 

pudukkotai district police childrens foods and accommodation arranged


புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தில் 13 வயது சிறுமி குடிதண்ணீர் எடுக்க குளத்திற்குச் சென்ற நிலையில் அவரது தந்தை பன்னீர் மற்றும் அவரது இரண்டாவது மனைவி மூக்காயி, அவர்களின் உறவினர் குமார் ஆகியோர் சிறுமியைக் கொன்று விட்டு நாடகமாடியுள்ளனர். 

 

அவர்களின் நாடகத்தை அறிந்த போலீஸார் பன்னீர் மற்றும் குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிறுமி நரபலி கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் நடந்த சம்பவங்களைப் பார்க்கும் போது நரபலிக்கான தடயங்களும், சம்பவங்களும் இல்லை என்பது உறுதியாகிறது. ஆனாலும் இன்னும் நரபலியாகவே சொல்லப்படுகிறது.

 

இந்த நிலையில் தான் பன்னீரின் இரண்டாவது மனைவி மூக்காயி அருகே உள்ள வடுதாவயலில் தனது இரு பெண் குழந்தைகளுடன் தங்கி இருந்த நிலையில் கடந்த மாதம் 30- ஆம் தேதி மர்மமான நிலையில் இறந்ததால் அவரின் 2 பெண்குழந்தைகள் மூக்காயின் வயதான அம்மாவின் அரவணைப்பில் இருந்து வந்தனர். 

 

மகளும் இறந்துவிட்டாள், மருமகனும் சிறையில் இருக்கும் நிலையில் தன் அரவணைப்பில் இருந்த 2 பேரக் குழந்தைகளான பெண்குழந்தைகளை வைத்துக்கொண்டு, வாழ்வாதாரம் இல்லாமல் தானும், குழந்தைகளும் உணவில்லாமல் வாழ வழியின்றி மூதாட்டி மற்றும் குழந்தைகள் கஷ்டப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். 

 

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் உத்தரவின் பேரில், குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் லட்சுமி காவலர்களுடன் வடுதாவயல் கிராமத்திற்குச் சென்று வயதான பாட்டிக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கியதுடன் தந்தையும், தாயும் செய்த தவறால் ஆதரவும், உணவும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த இரண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அந்தக் குழந்தைகளை அழைத்து வந்த போலீஸார் சமூக நலத்துறை கண்காணிப்பில் இயங்கும் சத்தியா அம்மையார் நினைவு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து அவர்களுக்கு உணவு, இருப்பிடம் மற்றும் படிப்பிற்கான ஏற்பாடுகள் செய்தனர்.

 

போலீஸாரின் செயலைப் பார்த்த பொதுமக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் மற்றும் தாயுள்ளத்தோடு அழைத்து வந்து காப்பகத்தில் சேர்த்த போலீஸாரையும் பாராட்டி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.