Skip to main content

நாங்கதான் அங்க வருவோம்... இப்ப புதுசா நீங்க வர்றீங்க... புதுச்சேரி மதுப்பிரியர்களையும கவர்ந்த தமிழ்நாடு டாஸ்மாக்...

Published on 08/05/2020 | Edited on 08/05/2020
 tasmac shop



மே 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தவுடன் தமிழக மது பிரியர்கள் மட்டுமல்ல, புதுச்சேரி பார்டலில் உள்ள மதுப் பிரியர்களும் குஷியாகிவிட்டனர்.
 

பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பாண்டிச்சேரி செல்வதே பெரும்பாலும் மது அருந்ததான். அதிலும் பக்கத்தில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த பலர் அடிக்கடி மது அருந்த செல்வார்கள். கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டதால் தமிழ்நாட்டைப்போல புதுச்சேரியிலும் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டன. 
 

இந்த நிலையில் மே 7ஆம் தேதி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. நேற்று காலை முதலே புதுச்சேரி எல்லையில் இருப்பவர்கள் நடந்தும், இருசக்கர வாகனத்திலும் கடலூர், விழுப்புரம் மாவட்ட எல்லைக்கு நுழைந்தனர். அங்கு தங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் மூலம் மதுபானங்களை வாங்கினர். வரிசையில் கால் வலிக்க நின்று மதுபானங்களை வாங்கிய சிலர், அதனை கூடுதல் விலைக்கும் விற்றனர். அதனையும் புதுச்சேரியில் இருந்து வந்தவர்கள் வாங்கிச் சென்றனர். 
 

புதுச்சேரியில் இருந்து வந்தவர்களை, வழக்கமாக நாங்கதான் அங்க வருவோம், இப்ப புதுசா நீங்க வர்றீங்க என கிண்டல் அடித்துள்ளனர் இங்குள்ளவர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.