Skip to main content

பாதியில் ரத்தான திட்டக்குழு கூட்டம்! கிரண்பேடியும், நாராயணசாமியும் சராமாரி குற்றச்சாற்று!

Published on 07/07/2019 | Edited on 07/07/2019

புதுச்சேரி மாநிலத்திற்கான 2019 - 2020 ஆம் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இம்மாத இறுதியில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் தற்போதுள்ள நிதி ஆதாரம், துறை வாரியாக பட்ஜெட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தலைமை செயலகத்தில் மாநில திட்டக்குழு கூட்டம்,  திட்டக்குழுவின் தலைவர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில்  நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், தலைமை செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் அனைத்து துறை செயலாளர்கள் பங்கேற்றனர்.

 Puducherry Planning Committee meeting canceled


கூட்டம் தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தபோதே, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து திடீரென வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்த பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, “ திட்டக்குழு கூட்டத்திற்கு அதிமுக, திமுக, பாஜகவை சேர்ந்த  சட்டமன்ற கட்சி தலைவர்களை அழைக்க வேண்டுமென துணைநிலை ஆளுநருக்கு கோப்புகள் அனுப்பபட்டது. ஆனால் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அந்த கோப்புகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் இன்றைய கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் பங்கேற்கவில்லை. எனவே சட்டமன்ற கட்சி தலைவர்களை அழைக்காததை கண்டித்தும், அவர்களை  அழைத்து கூட்டத்தை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தும் கூட்டத்தை புறக்கணிப்பு செய்து வெளிநடப்பு செய்துள்ளோம்” என்றார்.

நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருக்கும்போதே, அங்கு வந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, என்னுடைய தரப்பு நியாயத்தையும் ஊடகத்திடம் தெரிவிக்க வேண்டுமென தெரிவித்தார். உடனே அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து முதலமைச்சரும், அமைச்சர்களும் சென்றவுடன் செய்தியாளர்களை சந்தித்த கிரண்பேடி,”  திட்டக்குழு கூட்டத்தில் விதிமுறைகள்படி யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். அதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. இன்று நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி சட்டமன்ற கட்சி தலைவர்கள் பங்கேற்க வேண்டுமென்ற கோப்பு என்னிடம் வந்தது. நான் அந்த கோப்பை தலைமை செயலாளர் மற்றும் திட்டக்குழு செயலாளருக்கு அனுப்பிவிட்டேன். அவர்கள் அந்த கோப்பை பார்க்கைவில்லை” என அதிகாரிகள் மீது குற்றம் சாற்றினார். மேலும் “ அடுத்த வாரம் சனிக்கிழமை விதிமுறைகளின்படி மீண்டும் திட்டக்குழு கூட்டம் நடைபெறும்” என தெரிவித்தார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.