Skip to main content

புதுச்சேரி மதுவை கடத்தி போலி ஸ்டிக்கர்கள் ஒட்டி விற்கப்பட்ட  மதுபானங்கள் பறிமுதல்!  

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்துவருவதாக விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனுக்கு கிடைத்த தகவலின்படி  சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆதி, கணேசன், எழில்குமார் மற்றும் போலீசாருடன்  விருத்தாசலம் அருகே உள்ள பூதாமூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 
 

அப்போது அங்கு தகர சீட் போடப்பட்ட ஒரு கொட்டகையில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததை கையும், களவுமாக பிடிக்க போலீசார் விரைந்தனர். போலீசார் வருவதை அறிந்த மது விற்பனையாளர்கள் அப்படியே மதுபாட்டில்களை போட்டுவிட்டு ஓடி தலைமறைவாகி விட்டனர். 
 

இதையடுத்து 150 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார் அந்த பாட்டில்களை ஆய்வு செய்தபோது அதிர்ச்சியடைந்தனர். அதில் புதுச்சேரியிலிருந்து 47 ரூபாய் விலைப்பட்டியல் மற்றும் புதுச்சேரி மாநில அரசு என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த பாட்டில்களை அப்படியே தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மது பாட்டில்களை போல் 110 ரூபாய் எனவும், வேறு கம்பெனியின் போலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அவைகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. 

Puducherry liquor smuggled with fake stickers   Confiscation of Sold Brewers!

இதையடுத்து மது பாட்டில்களில் ஒட்டப்படுவதற்காக வைத்திருந்த 992 ஸ்டிக்கர் லேபிள்கள், 90 புதுச்சேரி அரசின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட குவார்ட்டர் மது பாட்டில்கள் மற்றும் 60 தமிழ்நாடு அரசு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவைகளை விருத்தாசலம் காவல் நிலையம் கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மேலும் ஸ்டிக்கர்கள் அனைத்தும் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் பிரிண்டிங் பிரஸ்ஸில் தயாரிக்கப்பட்டவை என்பதால், அந்த பிரின்டிங் பிரஸ்ஸின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபான பாட்டில்களில் போலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்பனை செய்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.