Skip to main content

"மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்"- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி!

Published on 12/12/2020 | Edited on 12/12/2020

 

PUDUCHERRY CM NARAYANASAMY PRESS MEET AT CHENNAI

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது புதுச்சேரி மாநிலகாங்கிரஸ் கட்சித் தலைவர் சுப்பிரமணியன், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தார். 

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, "மு.க.ஸ்டாலினை நானும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுப்பிரமணியனும் மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்காக அறிவாலயம் வந்திருந்தோம். கடந்த ஏழு மாத காலமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது அது ஓரளவு குறைந்திருக்கிறது. ஆகவே கடந்த வாரம் அவர்களை சந்திப்பதற்கு நான் நேரம் ஒதுக்கிக் கேட்டேன். அவர்கள் இன்று வரச் சொல்லிக் கூறியிருந்தார்கள். எங்களது சந்திப்பு மரியாதையை நிமித்தமான சந்திப்பு. புதுச்சேரி மாநிலத்தை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். கடந்த நான்கரை ஆண்டு காலமாக புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 

 

தொடர்ந்து சுமார் நான்கு ஆண்டுகளாக மத்தியில் இருக்கிற பாரதிய ஜனதா ஆட்சியும், புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக இருக்கின்ற கிரண்பேடியும், புதுச்சேரியில் மாற்று ஆட்சி இருக்கின்ற காரணத்தினால் ஆட்சிக் கவிழ்ப்பு வேலைகளை செய்வதற்கு அவர்கள் முனைந்து பாடுபட்டார்கள். அப்படி இருந்தாலும் கூட அதையெல்லாம் முறியடித்து நான்கரை ஆண்டு காலமாக மக்கள் நலத்திட்டங்களை எங்களுடைய காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சியில் மிக செம்மையாக செய்து வருகிறோம். அது மக்கள் நலத்திட்டங்களாக இருந்தாலும் சரி, தொழில் வளர்ச்சியாகவும் இருந்தாலும் சரி அல்லது புதுச்சேரி மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பது, கல்வித்துறையில் மருத்துவத்துறையில் வளர்ச்சியைக் காண்பது போன்றவைகள் எல்லாம் சிறப்பான முறையில் செய்து வருகிறோம். 

PUDUCHERRY CM NARAYANASAMY PRESS MEET AT CHENNAI

அதுமட்டுமில்லாமல் எங்களுடைய மாநிலத்தில் பல விருதுகளை எங்கள் அரசு மத்திய அரசிடமிருந்து பெற்றிருக்கிறது. குறிப்பாக இப்பொழுது இந்த கரோனா தொற்று காலத்தில் புதுச்சேரி மாநிலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது அகில இந்திய அளவில் 94% பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து சென்றிருக்கிறார்கள். ஆனால் எங்களுடைய மாநிலத்தில் 98% பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள், இறப்பு விகிதம் 1.6% ஆக இருக்கிறது. தினமும் பாதிக்கப்படுகிறவர்கள் 1% கீழ் உள்ளன. 

 

உமிழ்நீர் பரிசோதனை செய்வதில் கூட அகில இந்திய அளவில் புதுச்சேரி மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மொத்தமுள்ள 15 லட்சம் மக்கள் தொகையில் இதுவரை 4.5 லட்சம் மக்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்து, மத்திய அரசுடைய எல்லையைத் தாண்டி அதிகப்படியாக செய்திருக்கிறோம். இந்த 'நிவர்' புயல் வந்த சமயத்திலே, அதைத்தான் மு.க.ஸ்டாலினிடம் விளக்கமாகக் கூறினேன். 

PUDUCHERRY CM NARAYANASAMY PRESS MEET AT CHENNAI

இந்த கரோனா தொற்று நோயை எதிர்கொள்வதிலிருந்து, 'நிவர்' புயல் வந்த பொழுது கூட புதுச்சேரி மாநிலத்தில் நிவாரண பணிகளை முடுக்கிவிட்டு, மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் வெள்ள நீரையெல்லாம் ஆறு மணி நேரத்தில் மக்களை பாதிக்காத வகையில் அதை கடலுக்கு கொண்டு செல்வதிலிருந்து, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலிருந்து அதிகாரிகளும், நானும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் அதில் பணிப்புரிந்தோம் என்று அவரிடம் விளக்கமாக கூறினேன்.

 

தி.மு.க.- காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவின் படி அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கிறோம். நிர்வாக ரீதியாக இருக்கக் கூடிய பிரச்சனைகளை மனக்கசப்பாகப் பார்க்கக்கூடாது. 2ஜி வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவின் படியே நடவடிக்கை எடுக்கப்பட்டது; ராசா குற்றமற்றவர் என கோர்ட் கூறியது. 2ஜி வழக்கின் பின்புலத்தில் யார் இருந்தார்கள் என்பது அனைவருக்குமே தெரியும்." இவ்வாறு புதுச்சேரி முதல்வர் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.