Skip to main content

பாஜக நிர்வாகி உட்பட 216 பேருக்கு கரோனா! பா.ஜ.க அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிப்பு!  

Published on 16/06/2020 | Edited on 16/06/2020
Puducherry

 

புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் மாத தொடக்கத்திலிருந்தே கரோனா நோய் தொற்று தீவிரமாகி வருகிறது. நேற்று புதுச்சேரி பா.ஜ.க மாநில செயலாளர் ரத்தனவேலுவிற்கு கரோனோ நோய் தொற்று ஏற்பட்டு அரசு கோவிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் மாஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வரும் இவர் சென்னை சென்று வந்தபோது நோய்த்தொற்றுடன் வந்துள்ளார்.
 

அவருக்கு ஏற்பட்டதை போல தொழிற்சாலையில் பணியாற்றிய ஐந்து ஊழியர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொழிற்சாலையில் பணியாற்றிய 35-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். பா.ஜ.க மாநில செயலாளரான ரத்னவேலு புதுச்சேரி பா.ஜ.க தலைமை அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளதால் பாஜகவின் அலுவலகத்திற்குள் கிருமிநாசினி  மருந்து தெளிக்கப்பட்டது. 


இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று 14 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது. அதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 216 ஆக உயர்ந்தது. இவர்களில் 12 பேர் புதுச்சேரியையும், 2 பேர் காரைக்காலையும் சேர்ந்தவர்கள். இதில் 113 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 99 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் புதுச்சேரியில் நடந்த மகளின் வளைகாப்பிற்காக சென்னையிலிருந்து கடந்த மாதம் வந்த ஜிப்மர் ஓட்டுநரின் மாமனார் ( 75 வயது) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனளிக்காமல் இன்று (16.06.2020) இன்று உயிரிழந்தார். இதையடுத்து புதுச்சேரியில் இதுவரை 4 நபர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.


இதனிடையே சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் இருவரும் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தனர். 


அப்போது அவர்கள், "இன்று புதுச்சேரியில் புதிதாக 14 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனாவால் பாதிப்ப்பட்டவர்கள் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் 77 பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் 26 பேரும், புதுச்சேரியை சேர்ந்த வெளிமாநிலத்தில் 2 பேரும், காரைக்காலில் 4 பேரும், மாகே பகுதியில் 4 பேரும், ஆக மொத்தம் 113 பேர் கரோனா வைரஸ் பாதிப்பில் உள்ளனர். இதில் 99 பேர் இதுவரை குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். 


புதுச்சேரியில் இதுவரை 10,486 பேருக்கு பரிசோதனை செய்துள்ள நிலையில், 10231 பேருக்கு பாதிப்பு இல்லை. பாதிப்பு காரணமாக பொதுமக்கள் ஒருங்கிணைந்து அனைவரும் முகக்கவசத்துடன் செல்ல வேண்டும்" என்றனர். 


மல்லாடி கிருஷ்ணாராவ் கூறும்போது, "புதுச்சேரியில் மாஸ்க் இல்லை என்றால் முதல்முறை 500 ரூபாய் அபராதமும், இரண்டாவது முறை 1000 ரூபாய்யும்  அண்டை மாநிலங்களில் விதிப்பது போல்  கடுமையாக அபராதம் விதிக்க வேண்டும். நவம்பர், டிசம்பரில் நோய் தொற்று அதிகமாகும் என மத்திய அரசு தெரிவிக்கிறது. இதனால் 6 மாதங்களுக்கு நோய் தடுப்புக்கு தயாராக சுகாதார துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க முதல்வரை கேட்க உள்ளோம்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.