Skip to main content

சாலைப் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்...!

Published on 28/09/2020 | Edited on 28/09/2020

 

The public who stopped the road work ...!

 

விழுப்புரம்  மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து கிருஷ்ணகிரி வரை 180 கிலோமீட்டர் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி பல ஆண்டுகளாக நடப்பதும் நிற்பதும் மீண்டும் நடப்பதும் நிற்பதும் என ஆமையை விட மிக மிக மெதுவாக நடைபெற்று வருகிறது. இந்த சாலைப் பணியை விரைந்து முடிக்குமாறு பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்திவருகின்றன. இந்த சாலைப் பணியில் முறைகேடு செய்ததாக சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சாலை விரிவாக்கத் திட்ட அதிகாரியும் உண்டு. 

 

மத்தியில் ஆண்ட காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் துவக்கப்பட்ட இந்த சாலைப்பணி பாஜக அரசு ஆட்சிக்கு வந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் பணி மட்டும் இன்னும் நிறைவு பெறவில்லை. இந்த நிலையில் நேற்று திண்டிவனம் சந்தை மேட்டிலிருந்து ஐயன்தோப்பு வழியாகச் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வரை இணைக்கும் மேற்படி சாலைப் பணி நடைபெற்றுவந்தது. 

 

அப்போது, அந்தப் பகுதியில் விவசாய நிலம் வைத்திருக்கும் மக்கள் ஐயன்தோப்பில் இருந்து சந்தைமேடு வரை சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்று கூறி சாலை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரோஷனை காவல் நிலைய ஆய்வாளர் காமராஜ் மற்றும் போலீஸார் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

 

அவர்களின் கோரிக்கையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் அதற்காக சாலைப் பணியைத் தடுக்கக்கூடாது எனவும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் நெடுஞ்சாலைத்துறை தாசில்தார் கலா, வருவாய் ஆய்வாளர் குணசேகரன், கிராம நிர்வாக அலுவலர் செல்வக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களது கோரிக்கையை அரசு உயரதிகாரிகளுக்கு உடனடியாக தெரியப்படுத்தி விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து சாலைப் பணியைத் தடுத்து நிறுத்திய பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.