Skip to main content

சுடுகாடு, குடிநீர், சுற்றுச்சூழல் மாசு...! - ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள்

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

The public who petitioned the Collector's Office

 

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் 23ந் தேதி திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டி.ஆர்.ஓ சந்தோஷிணி சந்திரா தலைமையில் நடந்தது. அதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் குறித்து மனுக்களை அவரிடம் வழங்கினார்கள். அப்போது ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த சென்னசமுத்திரம் கிராமம் வருந்தியா பாளையம் பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு வந்து மனு கொடுத்தனர். 

 

பிறகு அவர்கள் கூறும்போது, ‘ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் சென்னசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 2 வருந்திய பாளையத்தில் நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் கீழ் சென்னசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 ஊர்களிலிருந்து கழிவுநீர் கொண்டுவந்து வருந்திய பாளையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதாக தெரியவந்துள்ளது. மேற்படி சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இடத்தில் வருந்தியபாளையம், புதூர், ரோட்டூர், ராமநாதபுரம் மற்றும் முனியப்பன் சுவாமி கோவில் ஆகிய ஊர்களைச் சேர்ந்த இறந்தவர்களின் உடல்களை எரியூட்டுவதற்கும், புதைப்பதற்கும் பயன்படுத்தி வருகிறோம். அந்த இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால் மேற்கண்ட ஊர் பொதுமக்கள் சுடுகாடு இன்றி மிகவும் பாதிக்கப்படுவார்கள். குடிநீர் தேவைகளும் பாதிக்கப்படும். சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை சுற்றிலும் உள்ள விவசாய நிலங்கள் கழிவுநீர் மூலம் சுமார் 150 ஏக்கர் மஞ்சள் கரும்பு நெல் வாழை முதலிய பயிர்கள் மாசடைந்து எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். எனவே இந்தப் பகுதியில் கழிவுநீர் அமைக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்’ என்றனர்.

 

அதேபோல் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள அண்ணாநகர் புது காலனி பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து டி.ஆர்.ஓ. விடம் மனு கொடுத்தனர். அவர்கள் கூறும்போது, "நாங்கள் மேற்கண்ட முகவரியில் பல வருடங்களாக வசித்து வருகிறோம். தமிழக அரசின் மூலம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. நாங்கள் 75-க்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் இங்கு தான் வசித்து வருகிறோம். எங்களுக்கு மின் இணைப்பு உள்ளது. ஆனால் எங்கள் பகுதி மக்களுக்கு முறையாக தண்ணீர் வருவதில்லை. இதனால் குடிநீர் தேவைகளுக்கு சிரமப்பட்டு வருகிறோம். தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தொலைவில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்’ என்றார்கள்.

 

இதேபோல் அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர், முத்து கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அவர்கள், நாங்கள் மேற்கண்ட இடத்தில் 30 குடும்பங்களுடன் வசித்து வருகிறோம். அரசு புறம்போக்கு நிலத்தில் எங்க ஊரைச் சேர்ந்த மூதாதையர்கள் பல வருடங்களாக சுடுகாடாக பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் தனியார் சிலர் சுடுகாட்டில் உள்ள பல பகுதிகளில் மணலை அள்ளினார்கள். இது குறித்து எங்க ஊர் பொதுமக்கள் கேட்டபோது இது எங்கள் பட்டா நிலத்தில் உள்ளது உங்களுக்கு சுடுகாடு கிடையாது என்று அவர்கள் திட்டினார்கள். எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு சுடுகாட்டை அளவீடு செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதேபோல் எங்க ஊருக்கு சாலை வசதியும் இல்லை. நாங்கள் இதுவரை ஓடை பள்ளத்து ஓரமாக புறம்போக்கு வண்டிப் பாதையை பயன்படுத்தி வந்தோம். தற்போது அந்த வண்டி பாதையையும் ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே வண்டி பாதைனய ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு எங்களுக்குத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். என்றார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.