Skip to main content

தொடர் திருட்டு; பதறும் பொதுமக்கள்; நடவடிக்கை எடுக்குமா நாகை காவல்துறை

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

The public who are worried about serial theft; Nagai police will take action!

 

நாகை அருகே பிரதாபராமபுரம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவம் குறித்து கிராமமே திரண்டு மாவட்ட எஸ்.பி ஜவஹரிடம் மனு அளித்துவிட்டு திரும்புவதற்குள் மீண்டுமொரு திருட்டு சம்பவம் அரங்கேறியதால் கிராம மக்களையும், போலீசாரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.


நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமபுரம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பிரதாபராமபுரம், பூவைத்தேடி, ராமர்மடம் செருதூர், உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் நேற்று நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹரிடம் புகார் மனு அளித்தனர்.


மனுவை பெற்றுக்கொண்ட நாகை மாவட்ட எஸ்.பி,  நேரடியாக பிரதாபராமபுரம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டதோடு மக்களை நேரடியாக சந்தித்தார். அதோடு இன்றிரவு முதல் கூடுதலாக தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் தங்களை இணைத்துக்கொண்டு பணியாற்றலாம் என்று தெரிவித்தார். இது அப்பகுதி மக்களுக்கு ஆறுதலாக இருந்தது. அந்த ஆறுதல் சிறிது நேரம்கூட நீடிக்கவில்லை. மாவட்ட எஸ்.பி, மக்களை சந்தித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் பூவைத்தேடி பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரது வீட்டில் திருட்டுப் போனது. போலீசார் இருக்கும்போதே திருட்டு நடக்கிறதே, என பொதுமக்கள் ஆவேசம் கலந்த அச்சமடைந்தனர்.

 

The public who are worried about serial theft; Nagai police will take action!

 

இந்தநிலையில், காவல்துறையை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து திருட்டு சம்பவம் நடந்த  இடத்திற்கு விரைந்த எஸ்.பி ஆய்வு மேற்கொண்டார். மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்தப் பகுதியில் துப்பு துலக்கப்பட்டது.

 

எஸ்.பி.யிடம் புகார் தெரிவித்த பொதுமக்கள், "சாராயத்தையும் கஞ்சாவையும் ஒழித்தாலே நிச்சயம் திருட்டும், வழிபறியும் குறைந்துவிடும்" என்றனர்.

 

குற்றவாளிகள் யார் என காவல் நிலையம் சென்று புகார் அளித்தால், கழுத்தை அறுத்தாலும் பார்த்துக் கொள்ளலாம் எனப் போலீசார் தெரிவித்தது பொதுமக்களை ஆத்திரமடையச் செய்தது. “பாதுகாப்பு தரவேண்டிய போலீசாரே இவ்வாறு தெரிவிப்பது வேதனை அளிக்கிறது” என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.