திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே இன்று திறக்கப்பட இருந்த சுங்கச்சாவடி பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரத்தில் இன்று சுங்கச்சாவடி திறக்கப்பட இருந்தது. இதற்கு அந்தப் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இன்று காலை முற்றுகை போராட்டம் நடத்தி வந்த நிலையில், திடீரென அங்கு கூடியிருந்த மக்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.