Skip to main content

இரவு 12 மணிவரை பொதுசேவை மையங்கள் திறந்திருக்க உத்தரவு!!

Published on 30/11/2018 | Edited on 30/11/2018
Public Service Centers

 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு குறித்து பதிவுசெய்ய இன்று கடைசி நாள் என்பதால் இன்று இரவு 12 மணிவரை பொதுசேவை மையங்கள் திறந்து வைக்க வேண்டும் என வேளாண் துறை அறிவித்துள்ளது.

 

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் தென்னை, மா, பலா போன்ற மரங்களும் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி பாதிக்கப்பட்ட மரங்கள் மற்றும் பயிர்கள் குறித்து பதிவு செய்ய இன்று கடைசிநாள் என்பதால் இந்த அறிவிப்பை வேளாண்துறை வெளியிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்