Skip to main content

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்...

Published on 07/10/2020 | Edited on 07/10/2020

 

 

Public road blocked  to open Tasmac ...
                                                                மாதிரி படம்

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ளது தொட்டியம் கிராமம். இந்த கிராமத்தின் பஸ் நிலையம் எதிரில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடை, அந்த இடத்தில் சுமார் ஐந்து ஆண்டுகளாக ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ஊரை ஒட்டி கடை உள்ளதால் மது அருந்துவோர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இந்த கடையை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் செய்துவந்தனர். 

 

பொதுமக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக கட்டிட உரிமையாளரும் டாஸ்மாக் கடையை காலி செய்யுமாறு அதிகாரிகளிடம் கூறி வந்துள்ளார். இதன் காரணமாக டாஸ்மாக் அதிகாரிகள் தொட்டியத்தில் இருந்து பங்காரம் செல்லும் சாலையில் உள்ள மகளிர் பொது கழிப்பிடம் மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் டாஸ்மாக் கடையை மாற்றப் போவதாக தெரிவித்துள்ளனர். 

 

ஆனால், ஊர் மக்கள் அந்த இடத்தில் டாஸ்மாக் கடை திறந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. அருகில் குடியிருப்பும் இருப்பதால் மது அருந்துவோர்களால் அதிக தொல்லை ஏற்படும் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கிராம ஊராட்சி செயலாளர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், பொதுமக்கள் நேற்று சின்னசேலம் கச்சராபாளையம் சாலையில் உள்ள பைத்தந்துறை பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியல் செய்தனர். 

 

இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்த சின்னசேலம் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை அழைத்து சமாதானம் செய்தனர். அப்போது டாஸ்மாக் கடையை அந்த இடத்தில் வைக்கக்கக்கூடாது என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மறியல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.