Skip to main content

துப்பாக்கியால் தலையில் தாக்கி மிரட்டல்! எஸ்.ஐ.யை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

 

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் அருகே செந்துறையில் துப்பாக்கியால் தாக்கி மிரட்டியதாக எஸ்.ஐ.யை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் குதித்தனர்.

 

Police


        
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் தொகுதியில் இருக்கும் செந்துறை பகுதியில் குரும்பபட்டி ரோடு அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு நத்தம் காவல் நிலையத்தைச் சேர்ந்த எஸ்.ஐ. மாதவராஜா இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்பொழுது  அந்த வழியில் வந்த  அழகு, பாண்டி, முருகன் உள்ளிட்ட 7 பேர் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு பதிவு செய்துள்ளார். அப்போது  அதே பகுதியைச் சேர்ந்த  செல்வகுமரன் உள்ளிட்ட சிலர் நின்று கொண்டிருக்கும் வாகனங்கள் மீதும் ஏன் வழக்கு பதிவு செய்கிறீர்கள் என்று கேட்டதால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.


 

 

அதன்பின்  வழக்குப்பதிவு செய்த இரு சக்கர வாகனங்களை மட்டும் போலீஸார் நத்தம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினருடன் செந்துறையில் உள்ள செல்வக்குமரன் வீட்டுக்கு சென்ற எஸ்ஐ மாதவராஜா அவரை ஸ்டேஷனுக்கு அழைத்துள்ளார்.

 

police



அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வகுமரன், "எதற்காக இந்த நேரத்தில் அழைக்கிறீர்கள். விடிந்ததும் நாங்களே வருகிறோம் என அவரது தந்தை ராஜேந்திரன் கூறியுள்ளார்". இதில் கோபமடைந்த மாதவ ராஜா தனது கைத் துப்பாக்கியை செல்வகுமரன் தலையில் தாக்கி மிரட்டியதாகவும் அதன்பின் செல்வகுமரனை போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து சென்றதாகவும் தெரிகிறது. இதை எதிர்த்து செந்துறையில் திரண்ட பொதுமக்கள் எஸ்.ஐ.மாதவ ராஜாவை  கண்டித்து பஸ் மறியலில் குதித்தனர்.


 

 

இந்த விஷயம் டிஎஸ்பி வினோத்துக்கு தெரியவே உடனே போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று பஸ் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது டிஎஸ்பி வினோத் பொதுமக்களிடம் பேசும்போது, இச்சம்பவம் குறித்து விசாரித்து அந்த எஸ்.ஐ. மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்களும்  சாலை மறியலை கைவிட்டனர். இதனால் இரண்டு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது