விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே திருவெண்ணைய் நல்லூர் சாலையில் புதியதாக அரசு டாஸ்டாக் கடையை திறக்க அதிகாரிகள் இடம் தேர்வு செய்திருந்தனர். அந்த இடத்தை இன்று பார்வையிட்டு டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வந்தனர்.
அப்போது அங்கு கூடிய பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளை முற்றுகையிட்டு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பொதுமக்களின் கடும் எதிர்ப்பையடுத்து, டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை கைவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர்.