Skip to main content

அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பொதுமக்களின் ஐடியா!

Published on 19/06/2018 | Edited on 19/06/2018

வடகாடு வடக்குப்பட்டி அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பள்ளியில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. 

 

மாணவர்கள் குறைவாக உள்ள அரசு பள்ளிகளை மூடப்படும் என்ற நிலையில் உள்ளதால் கடந்த சில ஆண்டுகளாக அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அந்தந்த கிராம பொதுமக்கள், பெற்றோர்கள், இளைஞர்கள் கிராமங்கள் தோறும் வீடு வீடாகச் சென்று வழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். மேலும் அந்தந்த பகுதி அரசு பள்ளிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொடுப்பதுடன் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள அரசுப் பள்ளிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ஆசிரியர்களை நியமித்துள்ளனர். மேலும் கொத்தமங்கலம் சிதம்பரவிடுதியில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேன் வசதி, இலவச சைக்கிள் போன்ற வசதிகளை செய்து கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள். இதே போல தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க இளைஞர்களின் பங்கு அதிகரித்துள்ளது.

 

Cycling for students to top up students to increase their involvement


 

அதே போல புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி வடக்குப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் விழிப்புணர்வ ஏற்படுத்தி இருந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் மாணவியும் மருத்துவருமான ராஜேஸ்வரி கடந்த கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற புவனேஸ்வரன் உள்ளிட்ட மாணவர்களுக்கு பாராட்டு இலவச சைக்கிள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.  


விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் ரவிச்சந்திரன், கிராமக் கல்விக் குழுத் தலைவர் ராதிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கையை அதிகரிக்க இளைஞர்களும், பெற்றோர்களும் அதிகமான பரிசுகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதித்துள்ளதாக இளைஞர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.