கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் தொடந்துஅதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் ஊரடங்கினால் ஏழைகள், தினக்கூலிகள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவின்றி தவிக்கும் அவர்களுக்கு அரசு சார்பிலும், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் சார்பிலும் பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன.தொண்டு நிறுவனங்கள் மட்டும் அல்லாது பொதுமக்களே தங்களால் இயன்றதை தாங்களாக முன்வந்து ஏழைகளுக்கு கொடுத்துவருகின்றனர். இன்று (09.04.2020) சென்னை, பாரிமுனை மற்றும் அடையார் பகுதிகளில் பொதுமக்கள் அந்தந்த பகுதியில் சாலை ஓரங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு உணவு பொட்டளங்களைக் கொண்டுவந்து வழங்கினர்.

Advertisment