Skip to main content

“இலங்கையில் விரைவில் ஜல்லிக்கட்டு போட்டி” - கிழக்கு மாகாண ஆளுநர்    

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

 Province Governor Senthil Thondaman has said that Jallikattu competition will soon be held in Sri Lanka

 

“இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முயற்சி எடுப்போம்” இலங்கை  கிழக்கு மாகாண ஆளுநரும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல மாநில கௌரவர் தலைவருமான செந்தில் தொண்ட்மான் தெரிவித்துள்ளார். 

 

இலங்கை கிழக்கு மாகாண ஆளுநராக தற்போது பொறுப்பேற்றுள்ள இந்திய வம்சா வழியைச் சேர்ந்த செந்தில் தொண்டமான் நேற்று திருச்சிக்கு வருகை தந்தார். இவர் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்சுத்தின் மாநில கௌரவ தலைவராக உள்ளதால், அச்சங்கத்தின் திருச்சி மாவட்டம் சார்பில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அச்சங்கத்தின் தலைவர் ஒண்டிராஜ், மாநில செயலாளர் சூரியூர் ராஜா உள்ளிட்ட மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். 

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,  ஜல்லிக்கட்டு நம்முடைய பாரம்பரியம், கலாச்சாரம் இரண்டையும் நம்மிடம் இருந்து பிரிக்க முடியாத ஒரு வரலாற்றுடன் தொடர்புடைய வீர விளையாட்டு, அந்த ஐல்லிக்கட்டு நடப்பதற்கு எந்தவித தடையும் இல்லை  என்பது மகிழ்ச்சியான செய்தி. எனவே இந்த சங்கம் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான பலகட்ட முயற்சிகளை எடுத்து அதில் வெற்றிப் பெற்றுள்ளது. எனவே நானும் இந்த சங்கத்துடன் இணைந்து செயல்படுவதில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.  தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  தமிழக மீனவர்கள் யாரும் வேண்டுமென்றே எல்லையை தாண்டி வருதில்லை.

 

பெரும்பாலும் கடல் சீற்றங்கள், உள்ளிட்ட சில காரணங்களால், அவர்கள் தவறுதலாக எல்லையைத் தாண்டி வந்து விடுகிறார்கள். அப்படி சிறை பிடிக்கப்பட்டவர்களைக் கடந்த 25 ஆண்டுகளாக இலங்கை அரசாங்கத்திடம் பேசி  அவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். இனியும் நாங்கள் அதைத் தொடர்ந்து செய்வோம். மீனவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை” என்றார். அதேபோல் இலங்கையில் ஐல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே விரைவில் அங்கு ஐல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அனைத்து விதமான முயற்சிகளும் எடுக்கப்படும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விராலிமலையில் ஜல்லிக்கட்டு; விஜயபாஸ்கர் தலைமையில் நடப்பட்ட முகூர்த்தக்கால்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Muhurthakaal planting program for jallikattu competition at Viralimalai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் சித்திரை மாத திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெறும். அதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியானது திருவிழாவிற்கு முன்பு நடைபெறும் பூச்சொரிதல் விழா அன்று வெகு விமர்சியாக நடைபெறும். ஆனால் இந்தமுறை தேர்தல் விதிமுறைகளின் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. அதனால் ஜல்லிக்கட்டு போட்டியின்றி  பூச்சொரிதல் விழா மட்டும் நடைபெற்றது.

தற்போது தேர்தல் முடிவடைந்ததையடுத்து ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவு கிடைத்ததையடுத்து  வருகின்ற 30-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து அதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியானது முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அதில் ஜல்லிக்கட்டு திடலில் உள்ள முகூர்த்தக் காலுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் செய்து நடப்பட்டது. இதில் விழா கமிட்டியினர், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பேரிகார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை உடனடியாகப் பெற்றுத்தந்த விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கமிட்டி நிர்வாகிகள், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.