Advertisment

உள்ளாட்சி தேர்தல் முடிவை ஜனநாயக முறையில் நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வரும் 2-ந்தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கைகாக காத்திருக்கும் நேரத்தில் ஆளும் கட்சி தரப்பில் இருந்து பல இடங்களை முறைகேடாக நாங்கள் அறிவித்து விடுவோம் என்று பேச்சு எழுந்துள்து.

Advertisment

 Protest;hold democratic election result

இந்த சூழலில் ஜனநாயக பூர்வமாக, முறையாக வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என்று திங்கள்கிழமை காலை பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சிகளின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் முத்து.பெருமாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு விடுதலை சிறுத்தைகளின் மாவட்ட துணைத்தலைவர் செல்வமணி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயலாளர் முடிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

local election protest Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe