Skip to main content

மரண சுரங்கம் வெட்டும் மணல் மாபியாக்கள்....கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்!!

Published on 23/11/2019 | Edited on 23/11/2019

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சிலம்பிமங்கலம் கிராமம் உள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள வயல்களில் மணல் அதிகம் உள்ளது. அதனால் முந்திரி, சவுக்கு, தைலம், நெல் உள்ளிட்ட பணப்பயிர்களை விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். 
 

protest will be done if government does not take action


இந்நிலையில், விவசாயம் செய்ய பொருளாதர வசதி இல்லாமல் இருக்கும் சில வயல்களை மணல் மாப்பியாக்கள் கைபற்றிகொண்டு அரசிடம் பெயருக்கு சவுடு மணல் என்று அனுமதி பெற்று அரசு அனுமதித்த ஆழத்தை விட 30 அடிவரை மணல் அள்ளி அரசுக்கு கோடிகணக்கில் வருவாய் இழப்பை ஏற்படுத்திகிறார்கள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, அந்த பகுதியில் உள்ள மக்கள் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிலம்பிமங்கலம் பகுதி வயல்களில் ராமலிங்கம் என்பவர் 3 ஏக்கருக்கு சவுடு மணல் குவாரி என அனுமதி பெற்று அரசு அனுமதித்த ஆழத்தை விட பல மடங்குக்கு அதிகமாக மணல் அள்ளியுள்ளார். மேலும், அருகில் உள்ள வித்யாசாகர் என்பவரின் பட்டா நிலத்தில் உள்ள மணலை எந்த அனுமதியும் இல்லாமல் ஒரு ஏக்கர் அளவுக்கு 30 அடி ஆழம் வரை அள்ளியுள்ளார்.

இதனையறிந்த நிலத்தின் உரிமையாளர் வித்யாசாகர் புதுச்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  இந்தநிலையில் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மணல் அள்ள வந்த 10க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்த சம்பவ இடத்திற்கு வந்த புதுச்சத்திரம் காவல்துறையினர் மணல் அள்ளக்கூடாது என்று கூறி தடுத்துநிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இது குறித்து அந்த பகுதியில் வசிக்கும் விவசாய சங்க நிர்வாகி கருனைச்செல்வம் கூறுகையில், "இந்த பகுதியில் அரசு அனுமதித்ததை விட அதிக ஆழத்தில் மணல் அள்ளுகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் தோண்டிய பள்ளத்தில் மழைகாலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது வயல்வெளிக்கு விளையாட செல்லும் சிறுவர்கள் தவறி விழுந்துவிட்டால் அடுத்த கனமே மரணம் ஏற்படும் சூழல் உள்ளது.

மேலும், கால்நடைகளும் மேய்ச்சலுக்கு சென்றால் விழுந்து உயிர் பலியாகிவிடும். இது குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை உள்ளிட்ட சம்பந்தபட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் புகார்கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த பள்ளங்களில் யாரவது விழுந்து உயிர் பலி ஆனால் மட்டும் தான் இந்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நடவடிக்கை இல்லையென்றால் இந்த பகுதியில் உள்ள அனைத்து சமூக பொதுமக்களை ஒருங்கிணைத்து கடலூர்- சிதம்பரம் சாலையில் மிகப்பெரிய மறியல் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.