ADVERTISEMENT

கலெக்டர் அலுவலக வாயிலில் துப்புறவு தொழிலாளர்கள் போராட்டம்

01:19 PM Nov 26, 2019 | Anonymous (not verified)

ஒய்வூதியம், நிலுவை தொகை உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராமப்புற மேல்நிலை தொட்டி மற்றும் துப்புறவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குநர்கள் மற்றும் துப்புறவு தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்கபட வேண்டிய நிலுவை தொகை, 7வது ஊதியக்குழு அரசாணைப்படி ஊதியம் வழங்குதல், ஒய்வூதியம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதுதிலிருந்து 200க்கும் மேற்பட்ட கிராமப்புற தொழிலாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT