Advertisment

திருக்கோவிலூர் பகுதியில் கடையடைப்பு போராட்டம்!!

அனைத்து வணிகர் சங்கம் சார்பிலும் நகைக்கடை உரிமையாளர்கள் சார்பிலும் திருக்கோவிலூரை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க கோரி நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு விழுப்புரம் இணைப்பு குழு சார்பில் திருக்கோவிலூரில் அனைத்து வணிகர்கள் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

protest in thirukovilur

புதிதாக பிரிக்கப்பட உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் பகுதியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கடையை அடைத்து ஆதரவு. கடந்த ஜனவரி 8ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிப்பு வெளியானது.

Advertisment

"கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்தப் பகுதி முழுவதையும் விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்கும்வரை போராட்டம் தொடரும். இறுதிவரை போராடுவோம் உயிர் உள்ள வரை போராடுவோம் கோரிக்கையை வென்றெடுக்க ஓரணியாய் அணி திரள்வோம்" என்கிறார்கள் மக்கள். இந்த போராட்டத்தால் திருக்கோவிலூர் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் போன்ற அறிகுறிகள் தெரிகின்றன.

protest Thirukovilur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe