Advertisment

மத்திய அரசை கண்டித்து புகைப்பட கலைஞர்கள்  உண்ணாவிரதம்

cmb protest

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து புகைப்பட கலைஞர்கள் இன்றுஉண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

Advertisment

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் சுதேசி மில் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேலான புகைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்காத மத்திய பாஜக அரசை கண்டிக்கும் வகையில்கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

தி.மு.க மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ, தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

cauvery Puducherry photographers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe