Skip to main content

கட்டாய தலைக்கவச சட்டத்திற்கு எதிர்ப்பு!; அதிமுக எம்எல்ஏக்கள் தலைக் கவசம் உடைத்து போராட்டம்!

Published on 13/02/2019 | Edited on 13/02/2019

 

PROTEST IN PUDUCHERRY

 

பிப்ரவரி 11 முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும்,  கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் டி.ஜி.பி சுந்தரி நந்தா அறிவித்திருந்தார்.  அதேசமயம் "தலைக்கவசம் அணிவது குறித்தும்,  அதன் அவசியம் மற்றும் பாதுகாப்பு குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், தண்டம் விதிக்கக் கூடாது" என முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள்,  எம்எல்ஏக்கள்,  பல அரசியல் கட்சிகள்,  பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர்.  ஆனால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்படி டி.ஜி.பி சுந்தரி நந்தா அறிவுறுத்தலின்படி காவல்துறையினர்,  போக்குவரத்து காவல்துறையினர் தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை  ஓட்டியவர்கள் மீது வழக்கு பதிந்து சம்மன் அனுப்பி நீதிமன்றத்தின் மூலம் அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  இது பல தரப்பு மக்களிடமும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

PROTEST IN PUDUCHERRY

 

 

இந்நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன்,  வையாபுரி மணிகண்டன்,  பாஸ்கர் உள்ளிட்டோர் தலைமையில் அதிமுகவினர் ஹெல்மெட் எனப்படும் தலைக்கவசங்களை சாலையில் போட்டு உடைத்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.  கட்டாய தலைக்கவச சட்டத்தை கடுமையாக்க கூடாது என அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.