Advertisment

தடையை மீறி போராட்டம்: மு.க.ஸ்டாலின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

Advertisment

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் நேற்று தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. சென்னை மெரினா சாலையில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தடையை மீறி மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த நிர்வாகிகள் மீது தடையை மீறி சென்னை அண்ணாசாலை, மற்றும் மெரினாவில் மறியல் செய்தது, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட 5 பிரவுகளின் கீழ் சென்னை திருவெல்லிக்ணேி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe